தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

தடயங்கள்

பெண்ணே :-   அன்று உன் விழியின் ஓர விழியை பார்த்த பின்
ஒவ்வொரு இரவும் கனவினிலே உன் நினைவுகளில் உன்னை
தேடித்தேடி அலைந்தேனே.. கிடைக்காத போதும்
தித்திப்பாய் இருந்ததடி என் தேடல்..



என்னவளே என் தேடலோ ஆத்தங்கரை மணற்பரப்பினிலே உன் காலடிதடத்தினை தேடுவதுபோல் தேடினேனே.. அந்தமணல்களை போல என்னுள்ளே உன் நினைவுகள் குவிந்து கிடப்பதால் என் தேடலிலே
உன் முகம் மட்டுமே தடயங்களாக கிடைத்ததே...

பெண்ணே, இன்று உன்னை காணாமல் என்னுள்ளே தேடினேனே,
கிடைக்காது என் உள்ளமோ விக்குதடி!

பெண்ணே,   உன் நினைவுகளோ என் கண்களிலே  கண்ணீராய்
பெருகி என் கன்னத்திலே  வடிகிறதடி உன் நினைவுகளாக..

பெண்ணே என் கண்ணீரிலே காய்ந்து போன என் கன்னத்தை தடவி பார்க்கிறேன் அதிலே உன் நினைவு தடயங்கள் ஏதேனும்
தெரிகிறதா என்று..

நான் என்னை மறந்து உன் நினைவோடு  தடவ தடவ ஊற்று தண்ணியை போல என்னுள்ளே உன் நினைவு பொங்க  மீண்டும் என் கண்களிலே கண்ணீர் வடிகிறதே.!1!.

          என்றும் என்னவளின் நினைவோடு
தோழன் கருங்கையின் "கருவேங்கை" கரியன்..
                                                        திருநெல்வேலி...

கவிதைகள் உலகம் ..smd safa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;