தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

பருவ காலம்

கோடையில் விழும் கடும் இடியில் வந்து
விழுந்தாய் என் மன மடியில்..

கார்காலத்தில் பெய்யும் மழைத் துளியில்
கண்காட்சியாய் நிறைந்தாய் என் கரு விழியில்..


வசந்தத்தில் வரும் தென்றல் காற்றில் கலந்து
ஓடினாய் என் இரத்த ஊற்றில்..

பனிக் காலத்தில் பொழியும் பனியில்
உரமாக உறைந்தாய் என் உயிர் நுனியில்..

இலையுதிர் காலத்தில் உதிரும் இலையில்
சருகாய் உதிர்ந்தாய் என் இதய வலையில்..

இனியக் காலச்சக்கரம் மீண்டு(ம்) வருமென்று
காத்திருக்கிறேன் என் உயிர் கொண்டு !!!

கவிதைகள் உலகம் ..smd safa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;