தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

கோபக்காரி


உனக்கென்னடி,
காரணத்தை பிடித்து,
வேகத்தை வளர்த்து,
கோபமாகி விலகிப்போய்விடுகிறாய் !
என்னையும் என் உறவையும் !
எப்பொழுது தணிவாய்?
எந்த நிமிடம் இணைவாய் என்று புலராமல் !
எரிமலைக்குளம்புகள்,
எனது விழியில் புரண்டோட !
பார்வை மறையும் நீர்த்தேக்கத்தில் !
நீ வா என்று அழுகிறேன் !
பதிலுக்கு நீ சா என்கிறாயே !
காதல் போனால் கருணையுமா போய்விடும்?
கடவுளின் பிரதியாகவல்லவா பிரார்த்தித்தேன் உனை !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதல் தோல்வியா


காதல் தோல்வியா?
அழு...
வாய்விட்டு அழு...
கதறிக்கதறி அழு...
உன்
கண்ணீரோடு காதலும்
கரைந்து போகும்வரை
அழு...
பின்பு
உலகத்தைப் பார்...
காதலையும் மீறி
எத்தனையோ அழகுகள்..

கவிதைகள் உலகம் ..smdsafa..

போதை


உண்டால் போதை தரும் பொருட்களுக்கு தடை விதித்தவன்

பார்த்தாலே போதை தரும் உன் கண்களுக்கு

                                                                        தடை விதிக்க மறந்துவிட்டான்..

கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் விழியோரம் நானிருப்பேன்


காலம் கடந்து,
என் கவிகளை
நீ வாசிக்கையில்,
உன்னிலிருந்து வெளியேற
வழியின்றி, வலியோடு...
உன் விழியோரம்
நானிருப்பேன்..!?
கண்ணீராக...

கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ இல்லாமல்


என் வாலிப வானம்
அமாவாசையானது
நிலவு நீ இல்லாமல்
என் இதயப் படகு
தவிக்கிறது
துடுப்பு நீ இல்லாமல்
என் இளமைச் சோலை
மணம் வீசவில்லை
மலர் நீ இல்லாமல்
என் வாழ்க்கைச் சாலை
வெறிச்சோடிக் கிடக்கிறது
வாகனம் நீ இல்லாமல்
ஆம்! தொடர்கின்றது
என் தனிமைப் பயணம்
ஒரு கணம் ஒரு யுகமாய்
ஒவ்வொரு பொழுதும் சோகமாய்..!

கவிதைகள் உலகம் ..smdsafa..

என் எழுத்து


எதைப்பற்றி வேண்டுமானாலும்,
எழுத முடியும் !
நீ எதிரே இல்லாதபோது !
இருக்கையில் !!
உனைத்தாண்டி எதையும்,
சிந்திக்க முடியாது !
உன்னைவிட,
உயர்ந்த விசயமும் கிடையாது !
நீமட்டும்தான் !
என் மனதை உன்னிடமே,
கட்டிவைக்கிற மாயாவி !!

கவிதைகள் உலகம் ..smdsafa..

ஆணின் எதிர்காலம்


எந்த ஒரு பெண்ணால்

ஒரு ஆணின் கடந்த காலத்தை மறக்க

வைக்க முடிகிறதோ அவள் தான்

அந்த ஆணின் எதிர்காலம் ஆகிறாள்...!!!!!

கவிதைகள் உலகம் ..smdsafa..

எப்படி முடிகிறது


காந்தம் கூட

எதிர் முனைகளை
மட்டும்தான் ஈர்க்கும்

ஆனால்

உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது

நான் எங்கிருந்தாலும்
என்னை ஈர்க்க......??

கவிதைகள் உலகம் ..smdsafa..

பேசியதில்


யோசித்து எழுதும் வரிகள்,
வெறும் வார்த்தைகளாகிவிடுகிறது,
கவிதைகளாகும்,
நீ பேசுகிற வாக்கியங்களின் முன்னே..........



கவிதைகள் உலகம் ..smdsafa..

நட்பின் நிழல்


காரணங்கள் சொல்ல எத்தனித்திருந்தால்,
நான் முயற்சிகளே எடுத்திருக்கமாட்டேன் !
உனது முடியாத காரியத்திற்கு !
முடியாது என்று ஒதுங்கவில்லை விலகி,
தோல்வி உன் தோள்களில் அமரும்வரை !
இயலாமை உனை சூழ்ந்த தருவாயில்,
எள்ளி நகையாடினாய் என் பங்களிப்பை !
எண்ணிப்பார்த்தேன் எனது போராட்டத்தை !
துணை நின்றேனே உன்னுடன் தளராமல் !
அதற்குத்தரும் பரிசா?
இந்த அவமானம் நண்பா?
வருத்தமில்லா வா எனைத்தேடி !
இனி எப்பொழுது விதி உன்னை விரட்டினாலும் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;