தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

யார் சொன்னது .?



என் கறுப்பு வெள்ளை 
கண்களிடம்
யார் சொன்னது ....?
உன்னைப் பார்த்தவுடன் 
வண்ணமயமாய்
விழித்திரையில் பதிவுசெய்ய
வேண்டுமென்று..

இயல்பாய் துடிக்கும் என் இதயத்திடம்
யார் சொன்னது?
உன்னைப் பார்த்தவுடன்
வேகமாக துடிக்க 
வேண்டுமென்று...

இனிதாய் பேசும் 
என் நாக்கிடம்
யார் சொன்னது ....?
உன் பேரை 
உச்சரிக்கும்போது
இசையோடு உச்சரிக்க 
வேண்டுமென்று ....

நீ நீயாக இருக்க
மாற்றம் மட்டும் என்னிலா !!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதல்

உருவத்தால் வருவது காதல் அல்ல
உள்ளத்தின் உணர்வுகளால்
உருவாவதே காதல்!

இதயத்தை திருடுவது காதல் அல்ல
இதயத்தால் இணைவதே காதல்!

இன்பத்தை பகிர்வது காதல் அல்ல
துன்பத்திலும் தொடர்வது தான் காதல்.!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உண்மை காதல்


அவளில் சாய்வதற்காக
சின்னதாய் ஒரு பொய்
சொல்வேன் - "தலை வலி"

உண்மையென நம்பி
அவள் துடிக்கும் துடிப்பில்
இருக்கும் உண்மை காதல் ...!!!

இல்லை இல்லை நான்
பொய் சொன்னேன்
என்றாலும்  அவள் நம்பமாட்டாள் ....!!




கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;