நான் செய்தது தவறென்றால்,
நீ செய்ததும் தவறுதான் !
மன்னித்து உறவாடுகிறேன் உன்னிடம் !
உணராமல் இருக்கிறாயே?
உச்சாணிக்கொம்பிலேயே !
இனி என்ன செய்யட்டும் நான்?
தன்மானம் தடவுகிறதே உன் நிராகரிப்பு !
தள்ளிவிட எத்தனிக்கிறாயா?
பிரிவெனும் கொடுந்தீயில்?
கொஞ்சம் இறங்கிவா இடர்கள் கலைந்து !
உயிர் கொடுப்போம் நம் நட்புக்கு !
அதற்கு உண்டு உலகில் சாகாவரம் !
இருப்போம் இறப்போம் எந்நிலையிலும்,
வாழ்ந்திடும் அது நம் உறவை பறைசாற்றி !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
======================
தாய் மடி கிடைக்காத
போது
உன் மடியில்
தலை சாய்ந்தேன்..
உன் மடியும்
கிடைக்காது
எனில்
மரணத்தின் மடியில்
தலை சாய்கிறேன்..
======================
===========================
உன் இதயத்தில் இடம்
இல்லையென்று தெரிந்
என் இதயம் உனக்காக
மட்டும் துடிக்கிறது
உன்
ஒரு வார்த்தைக்காக.. ஷபா..
===========================
========================================
என்னை மறந்திவிடு என்று
நீ கூறிய ஒரு வார்த்தையால்
நீ முத்தமிட்ட என் கண்கள்
நீங்காமல் கண்ணீர் சிந்துகின்றன
உன் நினைவை கழுவி விடலாமென்று ......
அவற்றுக்கு தெரியவில்லை
உன் நினைவை அழிக்க
கடல் நீரும் போதாதென்று
========================================
=================================================================
நினைவில் இல்லை என் ஜனனமே... !
உன்னைக் காணும் ஒவ்வொரு நொடியும் இறந்து பின் பிறக்கிறேன்,
அக்கணங்கள் ஒவ்வொன்றும் புதிய உலகில் இருப்பதாய் உணர்வதால்....!
காதலில் காத்திருப்பதும் சுகம் தான், ஆனாலும்
4 வருடமாக காத்திருப்பது தான் ஏனோ??
இது என்ன விதியா?? அல்ல இறைவனின் சதியா?? - smdsafa
=================================================================
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
எத்தனையோ கவிதை எழுதினேன் என் கைகள் அலுத்துப் போனது ஆனால் கவிதை அசரவில்லை உன் அழகை வர்ணிக்க !!! வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வழ...
-
இன்று மலர்ந்த கோடானுக் கோடி மலர்கள் சார்பாக உன்னை வாழ்த்துகிறேன்.., இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ******************************** ...
-
அன்பே! அழகுக்கு இலக்கணம் தெரியவில்லை உன்னை காணும் வரை.. கவிஞன் ஆனேன் பூ வாடி விடும் அதன் வாசமும் வாடாது.. நாம் கொண்ட நேசமும் மாறாது.. ...
-
நீ இங்கு இல்லை என்று தெரிந்தும் போகும் இடமெல்லாம் என் கண்கள் உன் முகத்தை தேடுகின்றது.. என் மனமும் உன்னையே நினைத்து