அன்று தான் பார்த்தேன் அப்படி ஒரு அழகியைதொடர்ந்தேன் நீ திரும்புவாய் என எண்ணாமல்
மறுகனம் மறுக்கிறேன் எதிர்பாத்தேன்
திரும்பினாய் புன்னகை பூவோடு
பூவிற்கு பெயர் வைக்க சொல்லி
அந்நேரமே செய்தி அனுப்பினாய்
ஆழ்மனதிருக்கு சம்மதம் என
ஆத்திரம் இல்லா உன் கடும் பார்வையால்
கொஞ்சம் வெட்கம் தான் பட்டுவிட்டேன்
கிருமி ஏதும் தாக்காமல் காய்ச்சலும்
கண்டுவிட்டேன்
பொழுது ஒன்று போக
என் முன்னே எதிரே வர எனக்கானவளாய்
நெருங்கும் நொடி பொழுதில்
உன் கை என் கையை கிள்ளிய வலி
இன்று வரை சுகமான வலி

உன் ஆர்வத்தை அறியா மடையன் நான்
பேச்சு என்ற ஒன்றை மறந்த மக்கும் நான்
ஆணாய் நான் தொடர பேச
உன் பெயர் என்ன என்ற ஒரு வரியின்
முதல் வார்த்தை உன் என்ற ஒரு சொல்
நான்கு முறை ஒளித்ததே உன் முன்னே
விடுமுறைக்கு நீ வர பக்கத்துக்கு
வீட்டிருக்கு என் பாதங்கள் பாதை போட
விடுமுறை முடிய எனக்கு விடுப்பு சொல்ல
கைபேசி ஆறுதல் கூற
சோகத்தோடு வழி அனுப்ப
சரி என்ற சொல்லுடன் விடை பெற்றாய்
நான் சொன்ன அத்தனைக்கும்
எதிர்பார்ப்புடன் ஏங்கி
ஏக்கம் கொஞ்சம் கலந்துஏதும் ஒளி அடிக்கா என் கைபேசி
நீ போய் இரண்டு தினம் ஆகி
உன்னை திட்டவே மறு தருனம்
கைபேசி ஒளிக்கவே
நான் தான் என்ற ஒரு சொல்
நொடி நின்ற என் மூச்சு மீண்டும் வந்தது
தொடரும் கைபேசி ஓசைகள்
அழுத்தும் பச்சை பட்டன்
இன்று வரை தொடர்ந்து .....
கவிதைகள் உலகம் ..smdsafa..
பேருந்து இருக்கைகளின்
பின்புறத்தில்
கிறுக்கி வைக்கப்பட்டிருக்கும்
இதய வரைபடத்தின்
இடையில் திண்டாடும்
இரண்டு பெயர்கள்...!
கல்லூரி நாட்களில்
காலை முதல்
மாலை வரை - தன்
காதலியை பற்றி
உளறியே - என்
உயிரெடுக்கும் நண்பன்...!
காதலுக்காக
உயிர்விடவும் துணியும்
சினிமாவின்
கதாநாயக கதாபாத்திரங்கள்...!

பெற்றோரை துறந்துவிட்டு,
எல்லாவற்றையும் மறந்துவிட்டு,
எவருக்கும் தெரியாமல்
மாலை மாற்றிக்கொள்ளும்
ரகசிய காதல் திருமணங்கள்...!
இந்த நிகழ்வுகள் அத்தனையும்
முட்டாள்களின் கதைகளாகவே
தெரிந்தன எனக்கு...!
அவளை நான்
சந்திக்கும் வரையில்...
கவிதைகள் உலகம் ..smdsafa..

கட்டுண்டு கிடக்கிறேன் உன் பாதங்களில்
குனிந்து கூட பார்க்கவில்லை-நீ
சலிக்காமல் தொடர்கிறேன் உன் நிழலை
தலை கூட அசைக்கவில்லை-நீ
வரண்டுவிட்டது என் நா
இன்னமும் கூட பேசவில்லை-நீ
துவண்டுவிட்டது என் ஜீவன்
நீர்வார்க்கக் கூட தயாராயில்லை-நீ

இருந்தால் என்ன?
நடுங்கி வீழ்ந்தாலும் நெருங்குவேன் உன்னை
மரணம் கொண்டாலும் மரித்து எழுவேன் பெண்ணே
உனக்காக!
உன் பால் கொண்ட காதலுக்காக..!
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அம்மா .... பிறந்தவுடன் சொன்னதும்.. உயிரை வலியோடு முடிக்கும் போது சொல்வதும், அம்மா.... . 'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்ம...
-
எப்போது ஒன்று சேர்வோம்? எப்படி ஒன்று சேர்வோம்? இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை! உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்...
-
அன்பே என்று அழைத்திடுங்கள்! ஆசை களை எல்லாம் பட்டியலிடுங்கள்! இதயங் களை ஈந்திடுங்கள்! ஈரவிழி களை துடைத்திடுங்கள்! உறவு களை நினைத்தத...
-
எத்தனையோ கவிதை எழுதினேன் என் கைகள் அலுத்துப் போனது ஆனால் கவிதை அசரவில்லை உன் அழகை வர்ணிக்க !!! வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வழ...
-
தேவை இல்லாத எண்கள் என்று; அலை பேசியில் இருந்து அழிக்கும் போது தான்,,, தெரிகிறது,,, உலகை விட்டுப் போன என் உயிர் நண்பன் பிரிவின்...










- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA