தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

கவிதை படங்கள்

கவிதைகள் உலகம் ..smdsafa..

வறுமை - வாழ்க்கை

சிறுமையில் வறுமையை கண்டேன் !

வாலிபத்தில் வலியை கண்டேன் !

முதுமையில் அனுபவத்தை கண்டேன் !

இவையிலிருந்து மீளும் முன்

வாழ்க்கை முடிந்து விட்டது !!!!!!!

கவிதைகள் உலகம் ..smdsafa..

நான் மரணித்து விட்டால்


மறக்கவும் முடியவில்லை

மரணிக்கவும் முடியவில்லை

நான் மரணித்து விட்டால்

நம் சுமையானே சுமைகளை

கல்லறை கூட தாங்காது அன்பே ..

கவிதைகள் உலகம் ..smdsafa..

அன்பு


அன்பின் வேர் 
ஆழமாக சென்றாலும் 
மேல் பரப்பில் படர்ந்தாலும் 
பாதிப்பு அன்பிற்கு தான் !!!!!

கவிதைகள் உலகம் ..smdsafa..

வறுமை



வசதி இருந்தும் அசதி இல்லை

பிச்சை எடுத்தும் புனிதம் இல்லை 

நடு நிலைவாதிக்கு தாகம் திற்பதர்க்கு
தண்ணியும் இல்லை

அவன் அழுகை
கேட்க கடவுளும் இல்லை

கவிதைகள் உலகம் ..smdsafa..

ஏழையின் கண்ணீர்


ஆண்டவனின் அற்புத

படைப்பில் அசைக்க முடியாத

அதிசய படைப்பு

ஏழையின் கண்ணீர்

கவிதைகள் உலகம் ..smdsafa..


கோவிலுக்குள்

என்னை சுமந்த 
காலனியை கழற்றி 
விட்டு என்னை வெறுத்த 
அவளை நெஞ்சில் சுமந்து 
கொண்டு செல்கிறேன் 
கோவிலுக்குள் !!!!

கவிதைகள் உலகம் ..smdsafa..

காதல்

புரிவது
கவிதை அல்ல காதல்

காதல் பிரிந்தால்
கவிதை புரியும்

கவிதை பிரிந்தால்
காதல் புரியும்..

 கவிதைகள் உலகம்  ..smdsafa..

அம்மாவே கவிதைதான்



அம்மாவுக்கு என்று தனியாக 
கவிதை வேண்டாம்... 

 அன்பாக பழகிப்பார்
அம்மாவே கவிதை தான்..

கவிதைகள் உலகம் ..smdsafa..

முள்



மனிதர்கள் போல் தான்
குத்தி கொண்டே இருக்கும் ....

அதில் பூக்கும் பூக்கள்
மனிதம் போன்றது

மலர்ந்து மணம் விசி
கொண்டே இருக்கும் ..


கவிதைகள் உலகம் ..smdsafa..

என்னவளின் அறிமுகம்



அன்று தான் பார்த்தேன் அப்படி ஒரு அழகியை
தொடர்ந்தேன் நீ திரும்புவாய் என எண்ணாமல்
மறுகனம் மறுக்கிறேன் எதிர்பாத்தேன்
திரும்பினாய் புன்னகை பூவோடு
பூவிற்கு பெயர் வைக்க சொல்லி

அந்நேரமே செய்தி அனுப்பினாய்
ஆழ்மனதிருக்கு சம்மதம் என
ஆத்திரம் இல்லா உன் கடும் பார்வையால்
கொஞ்சம் வெட்கம் தான் பட்டுவிட்டேன்
கிருமி ஏதும் தாக்காமல் காய்ச்சலும்
கண்டுவிட்டேன்

பொழுது ஒன்று போக
என் முன்னே எதிரே வர எனக்கானவளாய்
நெருங்கும் நொடி பொழுதில்
உன் கை என் கையை கிள்ளிய வலி
இன்று வரை சுகமான வலி

உன் ஆர்வத்தை அறியா மடையன் நான்
பேச்சு என்ற ஒன்றை மறந்த மக்கும் நான்
ஆணாய் நான் தொடர பேச
உன் பெயர் என்ன என்ற ஒரு வரியின்
முதல் வார்த்தை உன் என்ற ஒரு சொல்
நான்கு முறை ஒளித்ததே உன் முன்னே

விடுமுறைக்கு நீ வர பக்கத்துக்கு
வீட்டிருக்கு என் பாதங்கள் பாதை போட
விடுமுறை முடிய எனக்கு விடுப்பு சொல்ல
கைபேசி ஆறுதல் கூற
சோகத்தோடு வழி அனுப்ப
சரி என்ற சொல்லுடன் விடை பெற்றாய்
நான் சொன்ன அத்தனைக்கும்

எதிர்பார்ப்புடன் ஏங்கி
ஏக்கம் கொஞ்சம் கலந்து
ஏதும் ஒளி அடிக்கா என் கைபேசி
நீ போய் இரண்டு தினம் ஆகி
உன்னை திட்டவே மறு தருனம்
கைபேசி ஒளிக்கவே
நான் தான் என்ற ஒரு சொல்
நொடி நின்ற என் மூச்சு மீண்டும் வந்தது

தொடரும் கைபேசி ஓசைகள்
அழுத்தும் பச்சை பட்டன்
இன்று வரை தொடர்ந்து .....


கவிதைகள் உலகம் ..smdsafa..

கல்லறைக்குள் இருப்பேன்!



என்னவளே நம் காதல்
கண்ணில் இருந்து மலர்ந்த
காதல் அல்ல
இதயத்தில் இருந்து மலர்ந்த
காதல் ...
என் இதயம் துடிப்பதை
நிறுத்தும் வரை .. ஒவ்வொரு துடிப்பிலும்
உன் பெயர் சொல்லும் ...!
எப்போது உன் பெயர் என்
இதயம் சொல்லவில்லையோ
அப்போது நான் கல்லறைக்குள்
இருப்பேன் ....!


கவிதைகள் உலகம் ..smdsafa..

சந்திக்கும் வரை



பேருந்து இருக்கைகளின்
பின்புறத்தில்
கிறுக்கி வைக்கப்பட்டிருக்கும்
இதய வரைபடத்தின்
இடையில் திண்டாடும்
இரண்டு பெயர்கள்...!

கல்லூரி நாட்களில்
காலை முதல்
மாலை வரை - தன்
காதலியை பற்றி
உளறியே - என்
உயிரெடுக்கும் நண்பன்...!

காதலுக்காக
உயிர்விடவும் துணியும்
சினிமாவின்
கதாநாயக கதாபாத்திரங்கள்...!

பெற்றோரை துறந்துவிட்டு,
எல்லாவற்றையும் மறந்துவிட்டு,
எவருக்கும் தெரியாமல்
மாலை மாற்றிக்கொள்ளும்
ரகசிய காதல் திருமணங்கள்...!

இந்த நிகழ்வுகள் அத்தனையும்
முட்டாள்களின் கதைகளாகவே
தெரிந்தன எனக்கு...!
அவளை நான்
சந்திக்கும் வரையில்...


கவிதைகள் உலகம் ..smdsafa..

மரணித்த காதல்



மரக்கிளையிலிருந்து
மரணித்து விழுந்த
உலர்ந்த சருகாய்,
உன் சாலையில்
சிதறிக்கிடக்கிறேன் நான்...!

உன் பாதங்களால்
வதைக்காமல்,
உன் பார்வைகளை
விதைத்து செல்...!
உலர்ந்த என் உயிருக்குள்
உன்னால் பூக்கள் முளைக்கட்டும்...!


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதலுக்காக



 கட்டுண்டு கிடக்கிறேன் உன் பாதங்களில்
குனிந்து கூட பார்க்கவில்லை-நீ

சலிக்காமல் தொடர்கிறேன் உன் நிழலை
தலை கூட அசைக்கவில்லை-நீ

வரண்டுவிட்டது என் நா
இன்னமும் கூட பேசவில்லை-நீ

துவண்டுவிட்டது என் ஜீவன்
நீர்வார்க்கக்  கூட தயாராயில்லை-நீ


இருந்தால் என்ன?

நடுங்கி வீழ்ந்தாலும் நெருங்குவேன் உன்னை
மரணம் கொண்டாலும் மரித்து எழுவேன் பெண்ணே

உனக்காக!

உன் பால் கொண்ட காதலுக்காக..!


கவிதைகள் உலகம் ..smdsafa..




என் கற்பனை



மலர்களில் பூத்த
உன்மடி மஞ்சமடி
உன் புன்னகைக்கு
நான் என்றும்
தஞ்சமடி..

நின் எழில்முகம்
எல்லோராவையும்
மிஞ்சுமடி..
உனை அடைய நான்
கடவுளுக்களிப்பேன்
லஞ்சமடி!..


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;