நிலவே..
நீ ஓர் நாள் வந்து
பல நாள் தேய்கிறாய்..
மலரே..
நீ ஓர் நாள் மலர்ந்து
மறுநாள் உதிர்கிறாய்..
மழையே..
நீ ஓர் நாள் பொழிந்து
மறுநாள் ஓய்கிறாய்..
உறவே..
நீ ஓர் நாள் வந்து
மறுநாள் மறைகிறாய்..
'' நண்பனே..
நீ ஓர் நாள் வந்தாலும்
நம் நட்பு அலைபோல்
என்றும் இருப்பாய் என நினைத்தேன்''..
காலம் பிரித்ததே நண்பா
உன்னை எங்களிடம் இருந்து..
ரெஜின், என்றும் மறவாத உன் நினைவில் உன் நண்பர்கள்...
அன்பே
கள்ளத்தனமாய் ஒரு முறை கூட
என்னை ரசிக்கவில்லை என்று
உனது நெஞ்சை தொட்டு சொல்..
என் எல்லா கவிதைகளிலும்
உன்னை பற்றிதான் என்பது
உனக்கு தெரியாது என
உனது நெஞ்சை தொட்டு சொல்...
நான் உன்னை பார்க்காத நேரம்
நீ என்னை ரசித்த நொடிகள்
இல்லை என்று உனது நெஞ்சை தொட்டு சொல்...
கண்களால் ஆயிரம் காதல் கடிதங்கள்
தந்து வாசிக்கும் முன்
இமைகள் கொண்டு அடைத்தாயே
நெஞ்சை தொட்டு சொல் இல்லையென்று
எல்லாம் செய்து விட்டு காதல் எண்ணம்
உன்மேல் இல்லை என்கிறாய்
கண்ணாடி முன் நின்று
உன் நெஞ்சை தொட்டு கேட்டு பார்
ஜாக்கிரதை, ''உன் மனம் உன்னையேஅறைந்துவிட போகிறது''...
எட்டி உதைக்கும் உன் ஸ்கூட்டிக்காகவும்
ஏறி மிதிக்கும் உன் செருப்புக்ககவும்
காற்றில் பறக்கும் கேசத்திற்க்காகவும்
கையில் கிடக்கும் உன் வலையளுக்காகவும் அலையவில்லை ?
கழுத்தில் கொடுக்க ஒரு தாலிக்காக அலைகிறேன்.
எட்டி உதைக்காமல் ஏறி மிதிக்காமல்
காற்றில் பறக்கா ஆண்மையோடு உன்
கையை பிடித்து கொள்கிறேன் காதல் சொல்வாயா ?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
எத்தனையோ கவிதை எழுதினேன் என் கைகள் அலுத்துப் போனது ஆனால் கவிதை அசரவில்லை உன் அழகை வர்ணிக்க !!! வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வழ...
-
இன்று மலர்ந்த கோடானுக் கோடி மலர்கள் சார்பாக உன்னை வாழ்த்துகிறேன்.., இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ******************************** ...
-
அன்பே! அழகுக்கு இலக்கணம் தெரியவில்லை உன்னை காணும் வரை.. கவிஞன் ஆனேன் பூ வாடி விடும் அதன் வாசமும் வாடாது.. நாம் கொண்ட நேசமும் மாறாது.. ...
-
நீ இங்கு இல்லை என்று தெரிந்தும் போகும் இடமெல்லாம் என் கண்கள் உன் முகத்தை தேடுகின்றது.. என் மனமும் உன்னையே நினைத்து