தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

காதலித்து பாருங்கள்





கவிதைகள் உலகம் ..smdsafa..

நான் சொன்ன முதல் கவிதை


 என்னை சுவாசிக்க

வைத்தவளுக்கு

நான் சொன்ன

முதல் கவிதை

                   "அம்மா.."
 ஒவ்வொரு முறை

என் தாயுடன் கோயிலுக்கு

செல்லும் போதும்

கோயில் சிலையிடம்

காட்டிவிட்டு வருகிறேன்,

                    "என் கடவுளை.."

காரணமில்லாமல் யார்

மீதும் அன்பு வருவதில்லை..

ஆனால், அந்த காரணம்

யாருக்கும் தெரிவதும் இல்லை..

கவிதைகள் உலகம் ..smdsafa..

காதல் வந்த காரணத்தினால்



காதல் வந்த காரணத்தினால் தானோ,

பிப்ரவரி மாதத்திற்கு கூட

ஆயுள் குறைவாக உள்ளது??

கவிதைகள் உலகம் ..smdsafa..

உயிரடி



உறவுகள் அவ்வளவு எளிதில் உடைந்துபோவதில்லை !
மீறி உடைபட்டால் !
எவ்வளவு செப்பனிட்டாலும்,
இயல்புநிலை திரும்புவதில்லை !

அன்யோன்யம் "மகாப்பொக்கிஷம்"
அதை அழித்துவிடும் சூழ்நிலைகள்,
நமக்கே நாம் விதிக்கும் சாபக்கேடுகள் !

இதை உணர்ந்தே நகர்ந்தாலும்,
தப்பமுடிவதில்லை என்றாவது,
இந்த தவறாத உறியடிகளிலிருந்து !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உன்னை நேசிக்கும் இதயம்


நீ நேசிக்கும் இதயம் உன்னை திட்டினால் கவலைப்படாதே..

ஏனென்றால்,

உன்னை காயப்படுத்தும் முன்பே அது

கவலைப்பட்டிருக்கும்..

கவிதைகள் உலகம் ..smdsafa..

அவள் புறப்படும் நேரம்



புயல் எச்சரிக்கை கொடி எண்

எட்டை ஏற்றுங்கள்.....

அந்த தெரு முனையில்....

இது அவள் அலுவலகம்

செல்லும் நேரம்...


கவிதைகள் உலகம் ..smdsafa..

ஆணை



உன்னை நினைக்காதிருப்பதை,

நிச்சயம் ஏற்றுக்கொள்வதில்லை இதயம் !

அங்கே மறைமுகமாய் ,

கட்டாய ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது

உன்னால் !

உனக்காகவே வாழ்ந்து சரியவேண்டும்,

உறுதி மாறாமல் என்று !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

‎...........ஊமை



ஊடல் கூடலெல்லாம்,
உணர்ச்சியுள்ள உறவுகளில் விளையாடும் !
ஊமைச்சாமி உனக்கு என்ன தெரியும்?
உள்ளம் ஏற்குமா உனை காதலித்ததை ?
எந்நேரமும் மௌனம் நிஷ்டை மாயஉறக்கம் !
கனவிலேயே கிடக்கும் உனக்கு நிஜத்தில் நானெதற்கு ?
உருப்படாதவனே !
ஏதாவது பேசு !
உன் மௌனக்கொடுமை தாங்காமல் முடித்துவிடுவேன் உன்னை !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

பாதையில் மட்டுமல்ல என் இதயத்திலும் நீ



அன்று நண்பன்
என்று கைகொடுதாய்...

நான் உன் காதலன்
என்று உணர்ந்தேன்...

...
நலமுடன் வாழ்க
என்றாய்...

உன்னை நலமுடன்
வாழவைப்பேன் என்று
உணர்ந்தேன்...

தேடி செல்லாதே என்றாய்...

என் தேவதை நீ
என்று தேடி வந்தேன்...

நீ வந்த பாதையை ஓர் நாள்
திரும்பி பார் என்றாய்...

திரும்பி பார்த்தேன்
என் பாதை எங்கும்
நீதான் இருகிறாய்...

பாதையில் மட்டுமல்ல...

இன்றுவரை
என் இதயத்திலும்...

நீ என் மனைவி...


கவிதைகள் உலகம் ..smdsafa..

மாய ஆறு



முடிவுக்குவந்துவிட்ட சமயம்,
மீண்டும் கவிழ்ந்துவிட்டது நினைவு,
தலைகுப்புற தண்ணீருக்குள் !
இது காதலின் வழக்கம் !
பிரிந்துவிட முடிவெடுக்கும்,
மானம்கெட்ட மனோதைரியம்,
மயான வைராக்கியம்போல !
ஆறு தொடரும் பயணத்தை,
ஆனால் விழுந்தபடியே இருக்கும் அதில்,
விநோத முரண்டுபிடிக்கற்கள் !
உனக்கான முனகல் சத்தங்களுடன் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

நிமிடங்கள்



நீ காக்கவைத்த நிமிடங்களை கணக்கிட்டால்,
வாழ்கையின் ஒரு பகுதி,
படபடப்பும் பதட்டமுமாய் முடிந்துபோயிருக்கும் !
இருந்தாலும் அவைகள்,
வீணான நிமிடங்களல்ல !
உனக்காக எனை செதுக்கி நான் நானான நிமிடங்கள் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதல் ஏன் புனிதமானது ?



காதல் ஏன் புனிதமானது
என்று கேட்டாள்
கன்னி ஒருத்தி

பக்தியும் காதலும்
கிட்டத்தட்ட ஒன்றே என்றேன்..

எப்படி ? எப்படி ? என்றே
நெருங்கி வந்தாள்

வியர்த்தல் மயிர் சிலிர்த்தல்

உடல் குலுங்குதல்

கண்ணீர் அரும்புதல்

வாய்விட்டு அழுதல்

சொல்ல இயலாமை

மிடறு விம்முதல்

நா தழுதழுத்தல்

இதழ் துடித்தல்

மெய் மறத்தல்
.............
இவை எல்லாம்

காதலிலும் உண்டு

பக்தியிலும் உண்டு

ஆகவே காதலும்

புனிதமானது ..அழகே

என்றேன்

பிரசாதமாக

கிடைத்தது

முத்தம் ஒன்று

--------------------------


கவிதைகள் உலகம் ..smdsafa..

அவள் விரல் கோர்த்ததும்



அலையோடு அடித்துச்செல்லப்பட்டதும்,
அடியோடு இழுத்துக்கொள்ளப்பட்டதும்,
தொடர்ச்சியாய் நிகழ்ந்தது !
நீ எனை பார்த்தபோதும் !
பின் என் விரல்கள் கோர்த்தபோதும் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதல் தேர்வு



கல்லூரியில் கூட
யாரையும் பார்த்து
தேர்வெழுதியதில்லை..

காதலில் மட்டும்
உன்னைப்பார்த்து தான்
கவிதை எழுத தொடங்கிவிட்டேன்...


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;