தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

கவிதைத்துளிகள்



==============================

உன்னை அன்பாக 
தழுவ தான் முடியவில்லை 

ஒரு வாய்ப்பு கொடு பெண்ணே 
கவிதையால் வர்ணிக்க ....
==============================


==============================
கண்களால் வரைய 
படும் ஓவியம் கண்ணீர் ..

கண்ணீர் கொண்டு 
உருவாகும் காவியம் காதல் ..
==============================

=====================================
எங்கு போகிறாய் நண்பனே !!!
வாழ்க்கையின் வாசலை தேடியா !!
இல்லை வழுதிய வழிகளை தேடியா !!
இரண்டுமே நலம் தான் ..
நீ வழுதிய வழிகள் தான் 
உன் வாசலை திறக்கும் ..
=====================================

==========================
கண்ணாளனே 
நம் கனவுலக மழலைக்கு 
என்ன பெயர் தான் !!

கனவிலே கரையும் 
வாலிபதுக்கு 
கல்லறை தான் பெயரோ !!
==========================

================================
ரொம்ப நாள் ஆசை 
இப்படி எழுதனும்னு ....


குடி குடித்தவன் 
குடியை கெடுக்கும் ...

கூரை கூட இல்லாத 
குடியானவனுக்கு குடி எதற்கு 
அங்கே குடியானவன் காசில் 
மணி மண்டபம் மட மாளிகைகள் 
அவன் பிஞ்சு குழந்தைகளுக்கு 
கஞ்சி கூட இல்லை .......
நீ கற்றதும் கண்டதும் குடி தான் 
உன் குடியின் காரணமாக 
கெட்டது நீ மட்டும் அல்ல 
உன் தலைமுறையும் தான் 

குடிகார பயலே உனக்கு எதற்கு 
திருமணம் குழந்தை ஒரு கேடா ....
=================================

===========================
கவிதைகள் உலகம் ..smdsafa..
===========================

அந்தப்புரம்



உன் கூரிய நகங்கள் கூறிய வார்த்தைகள்,
கூனிக்குறுகிக்கிடக்கிறது தேகம் !
கூச்சம் மறந்து முற்றிய முனகல்களுடன் !
தீண்டாதே எனை இன்னொருமுறை !
இறப்பை தரிசித்து இங்கு திரும்புகிறேன் நான் !
காதலா !!
கட்டித்தழுவு அதற்காக !
ஒட்டி எடுக்கப்பார்க்காதே உயிரை !
உனக்காக வாழ்பவளை உடைத்து சில்லாக்குவது,
உனது கரங்கலன்றி வேறு எது?
என்னே நியதி இது?
தனியாய் சந்திக்கிறேன் பேர்வழி !
சதிகாரனாகிறாயே உன் உடமைக்கு நீயே?
தொடு மூழ்கடிக்காமல்..................
விடு சாகடிக்காமல்..


கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் பிரிவில்



காதல் பிரிந்தால் கனத்தையும்,
நட்பு பிரிந்தால் ரணத்தையும்
தருமென்று 
கேள்விபட்டிருக்கிறேன்..

இதோ !

முதன்முறை இரண்டையும்
உன் பிரிவில்
அனுபவிக்கிறேன் ...!!

            I Miss you...


கவிதைகள் உலகம் ..smdsafa..



உனக்குத்தான் அன்பனே



உறக்கமில்லை விழிகளுக்கு,
நீ இரக்கமில்லாமல்
உதறிப்போனத்தில் !
தூக்கிஎறிவதும் துஷ்டவார்த்தைகள்
பிரயோகிப்பதும்,
ஆண்மையின் அடையாளங்கள் என எவர்
அறிவுறுத்தினர்?
வனத்திலிருந்து வந்தவர்
என்று இனம்கானமுடிகிறவர்,
எத்தனை எத்தனை பேர் இங்கே !
அழவைப்பதும் அலைகளிப்பதும்
அன்றாடவழக்கம் பலருக்கு,
பின் அவரையே தொழலவைக்கவேண்டி
மாய்ந்துகிடப்பது,
செயற்கையின் சிரிப்பு அல்லவா?
பெண் படைக்கிறவள்,
உன் உயிரை உடலென்னும் கூட்டுக்குள்
அடைக்கிறவள் !
நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்
அவர்க்கு நாம்,
ஆயுளின்
கடைசி மூச்சு பிரிகிறவரை !
அதையா நினைக்கிறாய் நீ?
அந்திவந்தால் சுந்தரியாகவும்,
விழித்தெழுந்தால்
செக்குமாடாகவும்,
மாற்றத்தானே முயல்கிறாய்
மதியாமல்?
நிமிடங்கள் போதும் அந்தப்பெருந்தீ
நம்மைச்சாம்பலாக்க !
உணராமலேயே கொடுங்கோலனாய்,
வாழ்ந்து சரியச் சம்மதமே நமக்கு !
வேதனைப்படுத்தாதே பெண்ணை !
சோதனைக்கு உள்ளாகும் உன்
சுயமரியாதை !
அடங்கிவாழ் அந்த அற்புத
படைப்பிற்கு !
எதுவும் குறைந்துபோய்விட­
ாது இங்கே !
எந்த உயிரின் உச்சபட்ச நிம்மதியும்
எதிலிருக்கிறது தெரியுமா?
காதலியாய் தாரமாய் தங்கையாய்,
தாயாய் தோழியாய் பாட்டியாய்,
மகளாய் மனுசியாய் நல்ல உறவாய்,
ஒரு பெண்
உனை உச்சிமுகர்வதில்தான் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

ஏழை அரசன்




எனக்கு விதிக்கப்பட்ட நீள அகலங்களுக்குள்,
வந்து வாழ்வதாயிருந்தால்,
நெளிந்து வளைந்துதான்,
வாழ்ந்தாகவேண்டும் நீ !
நானே உனக்கானவன் என்று நிர்ணயித்துக்கொண்டபின்,
குனிந்துபோவதற்கும் பணிந்துபோவதற்கும்,
தலை சிலுப்பி உச்சுக்கொட்டினால்,
என்ன நிம்மதி நிறையும் நம்மிடையே?
இன்னொன்று தெரிந்துகொள் !!
யோசிக்காமல் தயாரானேன் நான்,
உனக்கான முக்கியத்துவங்களுக்கு !
அட்டைப்பெட்டிக்குள் அடைபட்டிருந்தாலும்,
ஆண்டவனுக்கு சமமாய் உனை நடத்தும் ஆடவனானேன் !
நீ உண்ட மிச்சம் நீ பருகிய எச்சம் என் விருந்தானது !
உன் வெள்ளந்தி வார்த்தைகளே என் பிணிகளின் மருந்தானது !
வாழவந்தபின் உனையே எனை ஆழவந்தவளாய் மதி ஏற்கும் !
என்றாலும் நீ !!
புத்தாடைகளும் பட்டோடாபங்களும்,
வெட்டவெளி மரியாதையும் உட்புக விரும்புவதாயின் !
எட்டாக்கனி இந்த ஏழை அரசன் உனக்கு !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

நினைவுகள் தான் நிரந்தரமென்று



உன்னருகில் நான் இல்லை என்றாலும்

உனக்குத் துணையாய் இருக்கும் என் நினைவுகள் எனச் சென்றாய்.... !

இப்போது தான் புரிகிறது எனக்கு,
உன் நிஜங்கள் அல்ல,

நினைவுகள் தான் எனக்கு நிரந்தரமென்று ..... !


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதல் சோக கவிதைகள் சில



================================
நீ அருகில் இருந்தால் மலருவேன் 
இப்பொழுது பார் 
நீ தொலைவில் இருப்பதால் 
மடிகிறேன் என்னுளே..
================================

================================
தொலைகிறேன் என்னுளே 
தொலைக்கிறேன் 
என் இதயத்தை உன்னுளே..
================================

================================
என் கவிதைகள் 
கசக்கின்றது 
உன் இதழ்களால் 
வாசிக்க படாமல் ...
================================


கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் நினைவுகளோடு



உனக்கு என்னுடன் பேசுவதற்கு
விருப்பமில்லாமல் இருக்கலாம்
ஆனால் எனக்கு
உன்னைதவிர யாருடனும்
பேசுவதற்கு விருப்பமில்லை...!
என்ன செய்வது நான் நீ
மறந்துவிட்டாய்....
ஆனால் என்னால் உன்னைப் போல்
மறந்து விட முடியவில்லையே!
நான் உன்னை மறக்க நினைத்து
இறந்து கொண்டிருக்கிறேன்...
என் இதயதுடிப்பை கூட
நிறுத்திவிடுவேன்
அதில் உன் நினைவுகளைதான்
என்னால் நிறுத்த முடியவில்லை...!
கடந்தகாலம் உன்னோடு
நிகழ்காலம் உன் நினைவுகளோடு
என் எதிர்காலம் யாரோடு...???
தவறாக எண்ணி விடாதே காதலா...
சாம்பலாகி போவேன்...!


கவிதைகள் உலகம் ..smdsafa..

மே தின கவிதைகள்



எல்லா விடியலும்
மனிதனுக்காய் !!!
நாளைய விடியல்
தொழிலாளார்களுக்காய் !!
எப்பொழுதும்
கிடைப்பதில்லை விடியல் !!
முன்னிருக்கும் பொழுதை
நினைத்து உழைப்போம் ..
வியர்வையின் துளி
நிலத்தில் விழுந்து
நிலங்களுக்கு வளமுட்டட்டும் ,,

மே தின வாழ்த்துக்கள் தோழர்களே ..


கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ எனக்கு மட்டும் சொந்தம்


===============================

இதே நிலமையில் என் காதல்
உன்னால்
உணரப்படுமாயின்
நான்
இக்கணமே தயாராகி விட்டேன்...!
என் பிறந்தநாளன்று சவமாய்
கிடக்கவும் தயங்க மாட்டேன்...!
================================

                                                                                  ================================

                                                                                  உன்னையின்றி யாரையும்
                                                                                  என்னால் நினைத்து பார்க்கவும்
                                                                                  முடியாது..
                                                                                  உன்னை யாருக்காகவும்
                                                                                  விட்டுக்கொடுக்கவும்
                                                                                  என்னால் முடியாது அன்பே..!
                                                                                  ================================

=================================

உண்மையான அன்பு உள்ளத்தில்
மட்டுமல்ல
உணர்வுகளிலும் கலந்திருக்க
வேண்டும்
அப்பொழுதுதான் உறவுகளில்
கூட
ஒரு உயிரோட்டம் இருக்கும்......!
எனக்கு தான் அந்த
கொடுப்பனவு இல்லை...
அதனாலேயே நான்
எனக்கு கொடுத்த இந்த முடிவு...!

=================================

                                                                                  =================================
                                                                                  சின்ன சின்ன குறும்புகள்
                                                                                  சின்ன சின்ன சண்டைகள்
                                                                                  பெரிய பெரிய மாற்றத்தை
                                                                                  வாழ்க்கையில் ஏற்படுத்துகின்ற
                                                                                  =================================



கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ தந்தது




கத்தியின்றி ரத்தமின்றி அழிக்கப்பட்டு விட்டனவோ
உன்னிடமிருந்த என் நினைவுகள் ?

ஆனால் நான் உன்னை நினைத்திருக்க
நீ தந்தது உன் மௌணம் மட்டுமே..... !


கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் அழகை வர்ணிக்க



எத்தனையோ கவிதை எழுதினேன்
என் கைகள் அலுத்துப் போனது

ஆனால் கவிதை அசரவில்லை
உன் அழகை வர்ணிக்க !!!

வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக
வழிய வந்து நிற்கின்றன !!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் நினைவுகள்



சூரியனாய் உன் காதல்
சுடர் வீசி மறைந்த பின்னும்
நிலவாக தொடர்வது உன் நினைவுகள் தான்
பகலில் கதிர்களாய் சூழும் உன் நினைவுகள்
நிலாவின் நேரத்தில்
கனவுகளான கணங்களால் உன் ஆக்ரமிப்புகள்
மீட்டெடுக்க முடியாத என் நிகழ்வுகள்


கவிதைகள் உலகம் ..smdsafa..

பாதையில் நீ



நான் நடந்துவந்தபாதையில்,
முளைத்துக்கிடந்தது ஒரு ஒற்றை ரோஜா !
கடந்துவந்து மணிகள் ஆகியும் கண்களில்,
படபடத்தபடியே அதன் குப்பைத்தனிமை !
ஒருவேளை என்னைத் துறந்துவாழும்,
உன்னை நினைவுபடுத்தியதோ அது !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதலாகி



அறியாத மோகத்தை அறிந்துகொள்ளும் ஆர்வமும்,
புரியாத ஈர்ப்பை புரிந்துகொள்ளும் வேகமும்,
தெரியாத உன்னிடம் தேடிவரவைத்தது !
நீ மிகைப்பட்டாய் நான் வயப்பட்டேன் !
இன்னபிற தொடர்சிகளில் துளிர்விட்டது களவு !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;