தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

உனக்குத்தான் அன்பனே



உறக்கமில்லை விழிகளுக்கு,
நீ இரக்கமில்லாமல்
உதறிப்போனத்தில் !
தூக்கிஎறிவதும் துஷ்டவார்த்தைகள்
பிரயோகிப்பதும்,
ஆண்மையின் அடையாளங்கள் என எவர்
அறிவுறுத்தினர்?
வனத்திலிருந்து வந்தவர்
என்று இனம்கானமுடிகிறவர்,
எத்தனை எத்தனை பேர் இங்கே !
அழவைப்பதும் அலைகளிப்பதும்
அன்றாடவழக்கம் பலருக்கு,
பின் அவரையே தொழலவைக்கவேண்டி
மாய்ந்துகிடப்பது,
செயற்கையின் சிரிப்பு அல்லவா?
பெண் படைக்கிறவள்,
உன் உயிரை உடலென்னும் கூட்டுக்குள்
அடைக்கிறவள் !
நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்
அவர்க்கு நாம்,
ஆயுளின்
கடைசி மூச்சு பிரிகிறவரை !
அதையா நினைக்கிறாய் நீ?
அந்திவந்தால் சுந்தரியாகவும்,
விழித்தெழுந்தால்
செக்குமாடாகவும்,
மாற்றத்தானே முயல்கிறாய்
மதியாமல்?
நிமிடங்கள் போதும் அந்தப்பெருந்தீ
நம்மைச்சாம்பலாக்க !
உணராமலேயே கொடுங்கோலனாய்,
வாழ்ந்து சரியச் சம்மதமே நமக்கு !
வேதனைப்படுத்தாதே பெண்ணை !
சோதனைக்கு உள்ளாகும் உன்
சுயமரியாதை !
அடங்கிவாழ் அந்த அற்புத
படைப்பிற்கு !
எதுவும் குறைந்துபோய்விட­
ாது இங்கே !
எந்த உயிரின் உச்சபட்ச நிம்மதியும்
எதிலிருக்கிறது தெரியுமா?
காதலியாய் தாரமாய் தங்கையாய்,
தாயாய் தோழியாய் பாட்டியாய்,
மகளாய் மனுசியாய் நல்ல உறவாய்,
ஒரு பெண்
உனை உச்சிமுகர்வதில்தான் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;