தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

ஏழை அரசன்




எனக்கு விதிக்கப்பட்ட நீள அகலங்களுக்குள்,
வந்து வாழ்வதாயிருந்தால்,
நெளிந்து வளைந்துதான்,
வாழ்ந்தாகவேண்டும் நீ !
நானே உனக்கானவன் என்று நிர்ணயித்துக்கொண்டபின்,
குனிந்துபோவதற்கும் பணிந்துபோவதற்கும்,
தலை சிலுப்பி உச்சுக்கொட்டினால்,
என்ன நிம்மதி நிறையும் நம்மிடையே?
இன்னொன்று தெரிந்துகொள் !!
யோசிக்காமல் தயாரானேன் நான்,
உனக்கான முக்கியத்துவங்களுக்கு !
அட்டைப்பெட்டிக்குள் அடைபட்டிருந்தாலும்,
ஆண்டவனுக்கு சமமாய் உனை நடத்தும் ஆடவனானேன் !
நீ உண்ட மிச்சம் நீ பருகிய எச்சம் என் விருந்தானது !
உன் வெள்ளந்தி வார்த்தைகளே என் பிணிகளின் மருந்தானது !
வாழவந்தபின் உனையே எனை ஆழவந்தவளாய் மதி ஏற்கும் !
என்றாலும் நீ !!
புத்தாடைகளும் பட்டோடாபங்களும்,
வெட்டவெளி மரியாதையும் உட்புக விரும்புவதாயின் !
எட்டாக்கனி இந்த ஏழை அரசன் உனக்கு !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;