தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

காதல்





காதல் ......

வார்த்தை ஒன்று
அர்த்தங்கள் பல ...


கவிதைகள் உலகம் ..smdsafa..

தனிமைப்படாதே


தவறுகளின் நடமாட்டம்,
தனிமைகளின் உருவேற்றம்,
தாகம் வளர்த்தவனை,
துரோகியாக்கும் உதாசீனம் !
தோற்றுப்போன நிமிஷம் தோன்றும்,
துடிக்கும் வல்லூறுகள் உனக்குள் !
ஓடிச்சென்று அமர்ந்துகொள் நண்பர் குழுவுக்குள் !
தனித்து மருதளிக்காதே அந்நேரம் !
உன் எண்ணங்கள் உருவெடுக்கக்கூடும்,
துளைக்கும் துப்பாக்கி ரவையாய் !
பின் அழிக்கக்கூடும் உன் ஆன்மாவை பழியால் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

வெகுளி



வெளிப்படையாய் மறுத்து வெகுளியாய் நடித்து,
நீ எனை தூரவீசிப்போனது அனைவர்க்கும் தெரியும் !
அதையே காரணமாகக்கொண்டு,
என் காதலைக்கலைத்துவிடுவேன்,
என்று நினைத்தது உன் முட்டாள்தனம் !
பழகிய எனக்கு தெரியாதா உன் புத்தியின் நர்த்தனம்?
நானும் விலகினேன் உன் விலகலின் அடிதொட்டு !
காரணம் நாம் கண்ணிமைகளுக்குள் காத்துவளர்த்த காதல் !
அதுவே கழுத்தை நெரிக்காமல் கயமை பொருத்தாமல்,
சுதந்திரமாய் பறக்கவிடச்சொன்னது உனை எனைவிட்டு !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

வறட்சி


வறண்ட நிலத்தின் வெடிப்புகள்,
தண்ணீர்கேட்டு தவம்கிடந்தது வானம்பார்த்து !
மழை வருமோ இல்லையோ ?
மனம் அழுதது அந்த அவலநிலம் பார்த்து !
எங்கோ எனக்குள் ஒரு ஜீவன் கெஞ்சிக்கூத்தாடியது !
ஆண்டவனே இறையே பிதாவே !
வறட்சிமட்டும் வேண்டாமே நாங்கள் வாழும் உலகுக்கு !
வெந்து சிதைகிறது எமை சுமக்கும் அன்னைமடி !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

சலனம்


தடுமாறியபோது உருமாறிய நிஜங்கள்,
நெஞ்சைவிட்டு நகர்ந்துகொண்டிருந்ததை,
கண்கூடாய் கானாதுபோனாலும்,
உள்ளூர உணரமுடிந்தது என்னால் !
அங்கே !
அப்பழுக்கில்லாத மனம் உன் ஒருத்திக்காக,
அரிதாரம் பூசத்துவங்கியிருந்தது !
ஐயகோ !
காதல் வந்துவிட்டது போலும் எனக்கு !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;