தவறுகளின் நடமாட்டம்,
தனிமைகளின் உருவேற்றம்,
தாகம் வளர்த்தவனை,
துரோகியாக்கும் உதாசீனம் !
தோற்றுப்போன நிமிஷம் தோன்றும்,
துடிக்கும் வல்லூறுகள் உனக்குள் !
ஓடிச்சென்று அமர்ந்துகொள் நண்பர் குழுவுக்குள் !
தனித்து மருதளிக்காதே அந்நேரம் !
உன் எண்ணங்கள் உருவெடுக்கக்கூடும்,
துளைக்கும் துப்பாக்கி ரவையாய் !
பின் அழிக்கக்கூடும் உன் ஆன்மாவை பழியால் !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
வெளிப்படையாய் மறுத்து வெகுளியாய் நடித்து,
நீ எனை தூரவீசிப்போனது அனைவர்க்கும் தெரியும் !
அதையே காரணமாகக்கொண்டு,
என் காதலைக்கலைத்துவிடுவேன்,
என்று நினைத்தது உன் முட்டாள்தனம் !
பழகிய எனக்கு தெரியாதா உன் புத்தியின் நர்த்தனம்?
நானும் விலகினேன் உன் விலகலின் அடிதொட்டு !
காரணம் நாம் கண்ணிமைகளுக்குள் காத்துவளர்த்த காதல் !
அதுவே கழுத்தை நெரிக்காமல் கயமை பொருத்தாமல்,
சுதந்திரமாய் பறக்கவிடச்சொன்னது உனை எனைவிட்டு !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
வறண்ட நிலத்தின் வெடிப்புகள்,
தண்ணீர்கேட்டு தவம்கிடந்தது வானம்பார்த்து !
மழை வருமோ இல்லையோ ?
மனம் அழுதது அந்த அவலநிலம் பார்த்து !
எங்கோ எனக்குள் ஒரு ஜீவன் கெஞ்சிக்கூத்தாடியது !
ஆண்டவனே இறையே பிதாவே !
வறட்சிமட்டும் வேண்டாமே நாங்கள் வாழும் உலகுக்கு !
வெந்து சிதைகிறது எமை சுமக்கும் அன்னைமடி !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அம்மா .... பிறந்தவுடன் சொன்னதும்.. உயிரை வலியோடு முடிக்கும் போது சொல்வதும், அம்மா.... . 'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்ம...
-
எப்போது ஒன்று சேர்வோம்? எப்படி ஒன்று சேர்வோம்? இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை! உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்...
-
அன்பே என்று அழைத்திடுங்கள்! ஆசை களை எல்லாம் பட்டியலிடுங்கள்! இதயங் களை ஈந்திடுங்கள்! ஈரவிழி களை துடைத்திடுங்கள்! உறவு களை நினைத்தத...
-
எத்தனையோ கவிதை எழுதினேன் என் கைகள் அலுத்துப் போனது ஆனால் கவிதை அசரவில்லை உன் அழகை வர்ணிக்க !!! வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வழ...
-
தேவை இல்லாத எண்கள் என்று; அலை பேசியில் இருந்து அழிக்கும் போது தான்,,, தெரிகிறது,,, உலகை விட்டுப் போன என் உயிர் நண்பன் பிரிவின்...







- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA