தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..
இதயக் காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதயக் காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒரு சின்ன உண்மை..

நமக்கு பிடிச்சவங்க மேல ரொம்ப கோவம்
இருந்தாலும் அவங்க கிட்ட பேசாம
நம்மளால இருக்க முடியாது...

அதே நேரம் பேசவும் மனசு வராது
mobile display ல அவங்க name தான் இருக்கும்
call பண்ணலாமா வேண்டாமான்னு 1000
முறை யோசிப்போம் . . .

ஏன் sometimes call பண்ணிட்டு ring
போறதுக்கு முன்னாடி cut
பண்ணிடுவோம்
அந்த time அவங்க நமக்கு call
பண்ணினா செம்ம happy ah feel
பண்ணுவோம்....

but பேசும்
போது என்னவோ கோவமா இருக்குற
மாறி தான் பேசுவோம்
but actual fact என்னன்னா அவங்க call
பண்ணதுமே நம்ம கோவம் போய்டும. ♡♥

கவிதைகள் உலகம் ..smdsafa..

அழகில் இல்லை காதல் என்றவள்



[நா(ன்) என்ன அழகாவா இருக்கேன்

என்ன போய் காதலிக்கறே

என்று கேட்ட காதலனுக்கு

காதலி சொன்னது…]

அழியும் அழகில்
இல்லை காதல்...

அழியாத அன்பில்
இருக்கிறது காதல் என்று...

இன்று உன்னிடம் பேச துடிக்கும் என்னை
வெறுப்பாய் பார்ப்பது ஏனடி?? -ஷபா!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

நான் மட்டும் தனியாக (ஒரு காதலனின் கண்ணீர்)




நாமிருவரும் சின்னஞ்சிறு வயதில், அம்மா-அப்பா விளையாட்டு விளையாடிய அதே மாந்தோப்பில்தான், நீ உன் அம்மாவின் சேலையைக் கிழித்து முதல் தாவணியும், நான் என் அப்பாவின் வேட்டியைக் மடித்து முதல் வேட்டியும் கட்டிக் கொண்டு, சந்தித்தோம் – பொங்கி வழிந்தக் கூச்சத்துடன், ஒரு திருவிழா நாளில்…

குனிந்த தலை நிமிராமல் நீ அப்போது சொன்னாய், ”இனிமே, நான் உன்ன ‘டா’ போட்டுக் கூப்பிட மாட்டேன்..” ♥

“ஏன் ?”

“மாட்டேன்னா… மாட்டேன்”

”அப்போ இனிமே நானும் உன்ன ‘டீ’ போட்டுக் கூப்பிடக் கூடாதா?”

“இல்லேல்ல… நீ கூப்பிடலாம்… கட்டிக்கப் போறவள பின்ன எப்டி கூப்டுவியாம்?” ♥ என்று சொல்லிக்கொண்டு, நாக்கைக் கடித்துக் கொண்டாய்.. உன் வெட்கத்தில், மாந்தோப்பில் இருந்த மாங்காய்களெல்லாம், சிவந்துப் போயின…

இன்னொரு அமாவாசை நாளில், என் அக்கா குழந்தைக்கு நான் சோறூட்டுகையில், நிலவைக் காட்டச் சொல்லி அடம்பிடித்தது குழந்தை… மாடியில் நின்றிருந்த உன்னைக் காட்டி, “அதோ பார்.. நிலா ♥ ” என்று குழந்தைக்கு நான் சோறூட்டியதைப் பார்த்துவிட்ட நீ, அடுத்த நாள் விடிந்தும் விடியாதப் பொழுதில், ஓடி வந்து என்னை முத்தமிட்டதும் அந்த மாந்தோப்பில் தான்… ♥

பிறிதொரு வருடத்தில் அதோ மாந்தோப்பில்தான், “என்னை மறந்துடு ” என்று அழுதாய்… அதோடு முடிந்துப் போனது எல்லாம்… 

இப்போது உன்னை ‘இந்தா’ என்று அழைக்க ஒரு கணவன் இருக்கிறான்…

’அம்மா’ என்று அழைக்க இரு குழந்தைகளும் இருக்கின்றனர்…

ஆனா,
“ஏண்டா கல்யாணம் வேணாங்கிற?” என்று கெஞ்சி அழும் என் அம்மாவுக்கு மட்டும் நான் மகனாயில்லை…


கவிதைகள் உலகம் ..smdsafa..

கவிதைத்துளிகள்



==============================

உன்னை அன்பாக 
தழுவ தான் முடியவில்லை 

ஒரு வாய்ப்பு கொடு பெண்ணே 
கவிதையால் வர்ணிக்க ....
==============================


==============================
கண்களால் வரைய 
படும் ஓவியம் கண்ணீர் ..

கண்ணீர் கொண்டு 
உருவாகும் காவியம் காதல் ..
==============================

=====================================
எங்கு போகிறாய் நண்பனே !!!
வாழ்க்கையின் வாசலை தேடியா !!
இல்லை வழுதிய வழிகளை தேடியா !!
இரண்டுமே நலம் தான் ..
நீ வழுதிய வழிகள் தான் 
உன் வாசலை திறக்கும் ..
=====================================

==========================
கண்ணாளனே 
நம் கனவுலக மழலைக்கு 
என்ன பெயர் தான் !!

கனவிலே கரையும் 
வாலிபதுக்கு 
கல்லறை தான் பெயரோ !!
==========================

================================
ரொம்ப நாள் ஆசை 
இப்படி எழுதனும்னு ....


குடி குடித்தவன் 
குடியை கெடுக்கும் ...

கூரை கூட இல்லாத 
குடியானவனுக்கு குடி எதற்கு 
அங்கே குடியானவன் காசில் 
மணி மண்டபம் மட மாளிகைகள் 
அவன் பிஞ்சு குழந்தைகளுக்கு 
கஞ்சி கூட இல்லை .......
நீ கற்றதும் கண்டதும் குடி தான் 
உன் குடியின் காரணமாக 
கெட்டது நீ மட்டும் அல்ல 
உன் தலைமுறையும் தான் 

குடிகார பயலே உனக்கு எதற்கு 
திருமணம் குழந்தை ஒரு கேடா ....
=================================

===========================
கவிதைகள் உலகம் ..smdsafa..
===========================

நீ எனக்கு மட்டும் சொந்தம்


===============================

இதே நிலமையில் என் காதல்
உன்னால்
உணரப்படுமாயின்
நான்
இக்கணமே தயாராகி விட்டேன்...!
என் பிறந்தநாளன்று சவமாய்
கிடக்கவும் தயங்க மாட்டேன்...!
================================

                                                                                  ================================

                                                                                  உன்னையின்றி யாரையும்
                                                                                  என்னால் நினைத்து பார்க்கவும்
                                                                                  முடியாது..
                                                                                  உன்னை யாருக்காகவும்
                                                                                  விட்டுக்கொடுக்கவும்
                                                                                  என்னால் முடியாது அன்பே..!
                                                                                  ================================

=================================

உண்மையான அன்பு உள்ளத்தில்
மட்டுமல்ல
உணர்வுகளிலும் கலந்திருக்க
வேண்டும்
அப்பொழுதுதான் உறவுகளில்
கூட
ஒரு உயிரோட்டம் இருக்கும்......!
எனக்கு தான் அந்த
கொடுப்பனவு இல்லை...
அதனாலேயே நான்
எனக்கு கொடுத்த இந்த முடிவு...!

=================================

                                                                                  =================================
                                                                                  சின்ன சின்ன குறும்புகள்
                                                                                  சின்ன சின்ன சண்டைகள்
                                                                                  பெரிய பெரிய மாற்றத்தை
                                                                                  வாழ்க்கையில் ஏற்படுத்துகின்ற
                                                                                  =================================



கவிதைகள் உலகம் ..smdsafa..

இரவை எதிர்ப்பார்த்து



கனவிலாவது வருவாய் என உன்னை எதிர்ப்பார்த்து காத்திருந்து........
இன்றும் ஏமாற்றத்துடன் தள்ளினேன் இரவை !

விடுதலையானது இரவு,
உறங்க மறந்துவிட்டேனோ என பெருமூச்சுடன் நான்......
நாளைய இரவை எதிர்ப்பார்த்து........!


கவிதைகள் உலகம் ..smdsafa..

என்னுள் ஒரு தேடல்



மூங்கில் காடுகளில் அலைந்து திரிந்து ,

ஒரு மூங்கிலை தேர்வு செய்து அழகிய புல்லாங்குழலாக

மாற்றி என் மனதோடு மகிழ்ந்தேன்...

ஊத நினைத்தேன்..

மறுத்தது...

பின்பு தான் தெரிந்தது..

அது ஊமை என்று...

அது போல் தான் உன்னுடனான என் வாழ்க்கையும்...

நீ என்னுள் இணைய மாட்டாய் என்று எனக்கு தெரியும்..

இருப்பினும் என்னுள் ஒரு தேடல்...

உன்னை காண...



கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் பெயரில் சங்கமித்த நொடி



ஜன்னல் கண்ணாடியில்
பட்டுச் சிதறும்
சாரலில்
என் பெயருக்கு கீழ்
உன் பெயர் எழுதி
அருகில் ஒரு
காதல் சின்னம் இட்டுப் பார்த்தேன்
அவ்வளவு அழகு...

அங்கும் கூட
என் பெயர் உருகி
உன் பெயரில் சங்கமித்த நொடி
அதை சொல்லாமல் இருப்பதே சுகம்...


கவிதைகள் உலகம் ..smdsafa..

அன்புடையவளே



நீயாய் அழைக்கும்வரை,
நானாய் வரமாட்டேன் !
என்ற கர்வம் தலைதூக்கியிருந்தால்,
நீ யாரோ நான் யாரோ?
என்ற நிலை வந்திருக்கும் நம் உறவுக்கு !
நீ போனால் பின்னாலே வந்தும்,
நான் போனால் நானே தணிந்தும்,
வீண்போகாமல் காத்தேன் அன்பை !
அதனின்பால்,
நீ எந்தன் எல்லைகளுக்குள்,
நான் உந்தன் தொல்லைகளுக்குள் !
தெரிந்துகொள்ள உன் கவனத்திற்கு,
இங்கே குளிர்ந்தே கிடக்கிறது,
நம் காதலெனும் மோகவெளி !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

கண்டுபிடியுங்கள்




1.மிகவும் உடல் பலமிழந்த நேரத்தில் உங்களை தாங்கி பிடிக்கும் கைகளை கண்டுபிடியுங்கள்.

2.எல்லோரும் பார்க்க மறுக்கும் நேரத்தில் உங்களை பார்க்க விரும்பும் கண்களை கண்டுபிடியுங்கள்.

3.உங்களின் மோசமான நிலைமையிலும் உங்களை நேசிக்கும் இதயத்தை கண்டுபிடியுங்கள்.

இவைகளை நீங்கள் கண்டுபிடித்தால் நேசம் உங்களை கண்டுபிடித்திருக்கும் !


கவிதைகள் உலகம் ..smdsafa..

என் இதயத்தின் உயிரோட்டம்




என் இதயத்தில்

ஊஞ்சல் கட்டி,

நித்தமும் ஆடுபவளே...!!!

நிறுத்திவிடாதே

உன் ஆட்டத்தை....!!!

நின்று விடும்

என் உயிர் ஓட்டம்...!!!


கவிதைகள் உலகம்

           ..smdsafa..

என்னவளின் அறிமுகம்



அன்று தான் பார்த்தேன் அப்படி ஒரு அழகியை
தொடர்ந்தேன் நீ திரும்புவாய் என எண்ணாமல்
மறுகனம் மறுக்கிறேன் எதிர்பாத்தேன்
திரும்பினாய் புன்னகை பூவோடு
பூவிற்கு பெயர் வைக்க சொல்லி

அந்நேரமே செய்தி அனுப்பினாய்
ஆழ்மனதிருக்கு சம்மதம் என
ஆத்திரம் இல்லா உன் கடும் பார்வையால்
கொஞ்சம் வெட்கம் தான் பட்டுவிட்டேன்
கிருமி ஏதும் தாக்காமல் காய்ச்சலும்
கண்டுவிட்டேன்

பொழுது ஒன்று போக
என் முன்னே எதிரே வர எனக்கானவளாய்
நெருங்கும் நொடி பொழுதில்
உன் கை என் கையை கிள்ளிய வலி
இன்று வரை சுகமான வலி

உன் ஆர்வத்தை அறியா மடையன் நான்
பேச்சு என்ற ஒன்றை மறந்த மக்கும் நான்
ஆணாய் நான் தொடர பேச
உன் பெயர் என்ன என்ற ஒரு வரியின்
முதல் வார்த்தை உன் என்ற ஒரு சொல்
நான்கு முறை ஒளித்ததே உன் முன்னே

விடுமுறைக்கு நீ வர பக்கத்துக்கு
வீட்டிருக்கு என் பாதங்கள் பாதை போட
விடுமுறை முடிய எனக்கு விடுப்பு சொல்ல
கைபேசி ஆறுதல் கூற
சோகத்தோடு வழி அனுப்ப
சரி என்ற சொல்லுடன் விடை பெற்றாய்
நான் சொன்ன அத்தனைக்கும்

எதிர்பார்ப்புடன் ஏங்கி
ஏக்கம் கொஞ்சம் கலந்து
ஏதும் ஒளி அடிக்கா என் கைபேசி
நீ போய் இரண்டு தினம் ஆகி
உன்னை திட்டவே மறு தருனம்
கைபேசி ஒளிக்கவே
நான் தான் என்ற ஒரு சொல்
நொடி நின்ற என் மூச்சு மீண்டும் வந்தது

தொடரும் கைபேசி ஓசைகள்
அழுத்தும் பச்சை பட்டன்
இன்று வரை தொடர்ந்து .....


கவிதைகள் உலகம் ..smdsafa..

கல்லறைக்குள் இருப்பேன்!



என்னவளே நம் காதல்
கண்ணில் இருந்து மலர்ந்த
காதல் அல்ல
இதயத்தில் இருந்து மலர்ந்த
காதல் ...
என் இதயம் துடிப்பதை
நிறுத்தும் வரை .. ஒவ்வொரு துடிப்பிலும்
உன் பெயர் சொல்லும் ...!
எப்போது உன் பெயர் என்
இதயம் சொல்லவில்லையோ
அப்போது நான் கல்லறைக்குள்
இருப்பேன் ....!


கவிதைகள் உலகம் ..smdsafa..

சந்திக்கும் வரை



பேருந்து இருக்கைகளின்
பின்புறத்தில்
கிறுக்கி வைக்கப்பட்டிருக்கும்
இதய வரைபடத்தின்
இடையில் திண்டாடும்
இரண்டு பெயர்கள்...!

கல்லூரி நாட்களில்
காலை முதல்
மாலை வரை - தன்
காதலியை பற்றி
உளறியே - என்
உயிரெடுக்கும் நண்பன்...!

காதலுக்காக
உயிர்விடவும் துணியும்
சினிமாவின்
கதாநாயக கதாபாத்திரங்கள்...!

பெற்றோரை துறந்துவிட்டு,
எல்லாவற்றையும் மறந்துவிட்டு,
எவருக்கும் தெரியாமல்
மாலை மாற்றிக்கொள்ளும்
ரகசிய காதல் திருமணங்கள்...!

இந்த நிகழ்வுகள் அத்தனையும்
முட்டாள்களின் கதைகளாகவே
தெரிந்தன எனக்கு...!
அவளை நான்
சந்திக்கும் வரையில்...


கவிதைகள் உலகம் ..smdsafa..

மரணித்த காதல்



மரக்கிளையிலிருந்து
மரணித்து விழுந்த
உலர்ந்த சருகாய்,
உன் சாலையில்
சிதறிக்கிடக்கிறேன் நான்...!

உன் பாதங்களால்
வதைக்காமல்,
உன் பார்வைகளை
விதைத்து செல்...!
உலர்ந்த என் உயிருக்குள்
உன்னால் பூக்கள் முளைக்கட்டும்...!


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதலுக்காக



 கட்டுண்டு கிடக்கிறேன் உன் பாதங்களில்
குனிந்து கூட பார்க்கவில்லை-நீ

சலிக்காமல் தொடர்கிறேன் உன் நிழலை
தலை கூட அசைக்கவில்லை-நீ

வரண்டுவிட்டது என் நா
இன்னமும் கூட பேசவில்லை-நீ

துவண்டுவிட்டது என் ஜீவன்
நீர்வார்க்கக்  கூட தயாராயில்லை-நீ


இருந்தால் என்ன?

நடுங்கி வீழ்ந்தாலும் நெருங்குவேன் உன்னை
மரணம் கொண்டாலும் மரித்து எழுவேன் பெண்ணே

உனக்காக!

உன் பால் கொண்ட காதலுக்காக..!


கவிதைகள் உலகம் ..smdsafa..




வெகுளி



வெளிப்படையாய் மறுத்து வெகுளியாய் நடித்து,
நீ எனை தூரவீசிப்போனது அனைவர்க்கும் தெரியும் !
அதையே காரணமாகக்கொண்டு,
என் காதலைக்கலைத்துவிடுவேன்,
என்று நினைத்தது உன் முட்டாள்தனம் !
பழகிய எனக்கு தெரியாதா உன் புத்தியின் நர்த்தனம்?
நானும் விலகினேன் உன் விலகலின் அடிதொட்டு !
காரணம் நாம் கண்ணிமைகளுக்குள் காத்துவளர்த்த காதல் !
அதுவே கழுத்தை நெரிக்காமல் கயமை பொருத்தாமல்,
சுதந்திரமாய் பறக்கவிடச்சொன்னது உனை எனைவிட்டு !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் நினைவில் தூங்குது



உன் நினைவில்
தூங்குது என் நெஞ்சம் --
சுமையாக இருந்தும்
வலுவிழக்க வில்லை
என் இதயம் ---
உணர்வுகள் தட்டி
எழுப்புகிறது பசியை
புசிக்கிறேன் --
நம் நினைவுகளை


கவிதைகள் உலகம் ..smdsafa..

அவளின் நினைவுகளில்



அவள் காதல் இன்று
என் கண்ணீராகவும்,
என் காதல் இன்று
அவள் நாட்குறிப்பின்
மிச்சமாகவும் தொடர்கிறேன்
அவளின் நினைவுகளில்
என் காதலை!


கவிதைகள் உலகம் ..smdsafa..

யோசிக்கிறேன்



நீ கண்ணீர் சிந்துவதில்
இல்லையடி வருத்தம்!
இத்தனை நாட்களாய்
என்னால் விழமுடியாத
அந்த விழிக்குள்
சிறு தூசி எப்படி
விழுந்தது என்று தான்
யோசிக்கிறேன்!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;