தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

கவிதைத்துளிகள்



==============================

உன்னை அன்பாக 
தழுவ தான் முடியவில்லை 

ஒரு வாய்ப்பு கொடு பெண்ணே 
கவிதையால் வர்ணிக்க ....
==============================


==============================
கண்களால் வரைய 
படும் ஓவியம் கண்ணீர் ..

கண்ணீர் கொண்டு 
உருவாகும் காவியம் காதல் ..
==============================

=====================================
எங்கு போகிறாய் நண்பனே !!!
வாழ்க்கையின் வாசலை தேடியா !!
இல்லை வழுதிய வழிகளை தேடியா !!
இரண்டுமே நலம் தான் ..
நீ வழுதிய வழிகள் தான் 
உன் வாசலை திறக்கும் ..
=====================================

==========================
கண்ணாளனே 
நம் கனவுலக மழலைக்கு 
என்ன பெயர் தான் !!

கனவிலே கரையும் 
வாலிபதுக்கு 
கல்லறை தான் பெயரோ !!
==========================

================================
ரொம்ப நாள் ஆசை 
இப்படி எழுதனும்னு ....


குடி குடித்தவன் 
குடியை கெடுக்கும் ...

கூரை கூட இல்லாத 
குடியானவனுக்கு குடி எதற்கு 
அங்கே குடியானவன் காசில் 
மணி மண்டபம் மட மாளிகைகள் 
அவன் பிஞ்சு குழந்தைகளுக்கு 
கஞ்சி கூட இல்லை .......
நீ கற்றதும் கண்டதும் குடி தான் 
உன் குடியின் காரணமாக 
கெட்டது நீ மட்டும் அல்ல 
உன் தலைமுறையும் தான் 

குடிகார பயலே உனக்கு எதற்கு 
திருமணம் குழந்தை ஒரு கேடா ....
=================================

===========================
கவிதைகள் உலகம் ..smdsafa..
===========================

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;