தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

உண்மை சொல்



உனக்குத்தானே தெரியும்,
நான் கொடுத்த முத்தத்தின் அழுத்தம்?
ஆகையினால்,
அதை நீ சொல்வதுதான் சரியாயிருக்கும் !
கொடுத்து முடித்தவுடன்,
கவலைகள் கலைந்து பிரகாசமானாயே !
சொல் ?
என் முத்தத்தில் இருந்தது எத்தனை மெகாவாட்?


கவிதைகள் உலகம் ..smdsafa..

கவனம் தேவை



வாகனத்தில் பயணம் கைபேசியில் கவனம்
தலை போகிற பேச்சானாலும் தவிர்க்கணும்
இல்லை தலையே போய்விடும் இலக்கணம் !!!



கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் பெயரில் சங்கமித்த நொடி



ஜன்னல் கண்ணாடியில்
பட்டுச் சிதறும்
சாரலில்
என் பெயருக்கு கீழ்
உன் பெயர் எழுதி
அருகில் ஒரு
காதல் சின்னம் இட்டுப் பார்த்தேன்
அவ்வளவு அழகு...

அங்கும் கூட
என் பெயர் உருகி
உன் பெயரில் சங்கமித்த நொடி
அதை சொல்லாமல் இருப்பதே சுகம்...


கவிதைகள் உலகம் ..smdsafa..

அம்மா



அள்ளிக் கொடுக்கும்
அன்னை
அன்பை வெல்ல
அகிலமதில் ஏதும் இல்லை...
அன்னையை நாளும் தொழுதிடு...
அன்பால்
அகிலமதை வென்றிடு”


கவிதைகள் உலகம் ..smdsafa..

ஆண் வர்க்கம்



எனக்கென்று படைக்கப்பட்ட நீ !
எப்படி எனக்குப் பிடிக்காத,
விசயங்களைச்செய்யலாம் ?
எனக்கான மாற்றங்களைத்தவிர்க்கலாம் ?
எனக்கு பிடித்த நிறத்தை உடுத்தாமல்,
எனக்கு பிடித்த உணவைச்சுவைக்காமல்,
உன்னவன் என்று என்னைக் கொண்டாடுவதில்,
என்ன அர்த்தம் இருக்கிறது பெண்ணே ?
உனக்காக வாழ்கிற எந்தனது எண்ணங்களை,
உச்சிமுகர்ந்து நடைமுறைப்படுத்தாமல்,
உன்போக்கிலேயே நடந்தால்,
என்னடி அர்த்தம் நாம் வளர்த்த காதலுக்கு ?
நான் உனக்கென்று ஆகி வருடக்கணக்கானபின்,
உற்றுநோக்குகிறேன் உன்னை !
உனக்குப் பிடித்தவைகள் எனக்கு பரிச்சயமில்லாதவைகள் !
நான் பிடிக்காதென ஒதுக்கிய விசயங்கள் !
நான் கேட்கிறேன் ?
என்ன விசயத்தில் ஒத்துப்போகிறாய் நீ என்னுடன் ?
என் கனவுகளை கொலுவில் ஏற்றாமல்,
கொள்ளி வைக்கிறாயே அனைத்திற்கும் மொத்தமாய் !
ஆசைகளை நிராசைகளாக்கவா நாயகியானாய் எனக்கு ?
மனது ஆறாத ரணங்கள் எனக்குள் உன்னால் !
எங்கே போனது எனக்கான உனது வாழ்க்கை ?
மொத்தத்தில் உயிரெனக்கருதினாலும்,
நீ நினைப்பதேயில்லை எனை உற்றவனாய் !
உனக்காக மூச்சுவிட்டு என்ன பிரயோஜனம் எனக்கு ?
தயங்கி ஒதுங்காமல் பளிச்சென்று பதிலைச்சொல் !
எனக்காக வாழ்வதினும் பெரிதாய்,
என்ன சுதந்திரம் வேண்டிக்கிடக்கிறது பெரிதாய் உனக்கு ?
அனைத்தையும் ஒதுக்கி வந்து அடை சரணாகதி !
எனை உணர்ந்து அம்மணி !
ஆண் உன் ஆதாரசுருதி !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உனக்கான என் கவிதையை



என் பேனாவில் மை தீர்ந்த பின்னும் கூட
எழுதிக் கொண்டிருக்கிறேன்,
உனக்கான என் கவிதையை...,

காதலுக்கு கண் இல்லை என்பதாலா ?
இல்லை....,

என் வார்த்தைகளுக்கு சாயம் பூச வேண்டியதில்லை என்பதால்.....!


கவிதைகள் உலகம் ..smdsafa..

கடந்துபோ



இடர்பாடுகளும் தொடர் தோல்விகளும்,
தடைகள்தானென்று மௌனிக்காதே !
மனமே !!
எழுந்துபோ கடந்துபோ,
நிற்காமல் நடந்துபோ !
அங்கே சலனமில்லா அலைகளின்,
சங்கீதக் கடற்கரை காத்திருக்கும் !
சங்கமமாகி உனைக்கரை அதில் !
உன் போராட்டங்களெல்லாம் சீராட்டப்படும் அதில் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

இடி சத்தம்



வானக் 

குழந்தை 

பிறந்ததும் 

வந்த

அழுகையோ ???


கவிதைகள் உலகம் ..smdsafa..

அன்புடையவளே



நீயாய் அழைக்கும்வரை,
நானாய் வரமாட்டேன் !
என்ற கர்வம் தலைதூக்கியிருந்தால்,
நீ யாரோ நான் யாரோ?
என்ற நிலை வந்திருக்கும் நம் உறவுக்கு !
நீ போனால் பின்னாலே வந்தும்,
நான் போனால் நானே தணிந்தும்,
வீண்போகாமல் காத்தேன் அன்பை !
அதனின்பால்,
நீ எந்தன் எல்லைகளுக்குள்,
நான் உந்தன் தொல்லைகளுக்குள் !
தெரிந்துகொள்ள உன் கவனத்திற்கு,
இங்கே குளிர்ந்தே கிடக்கிறது,
நம் காதலெனும் மோகவெளி !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

மின்தடை கவிதைகள்



# பின்னோக்கி
ஒரு
அனுபவ பயணம்
கற்காலத்துக்கு !!!

# நார்வேயிடம் இருந்து
கடன் பெறலாமா
இரவுச் சூரியனை ???

# குழந்தைகள் : இரவு வேண்டாம் - இருட்டு பயம்
பெரியவர்கள்  : இரவு வேண்டாம் - மின்தடை பயம் !!!



                                                         கவிதைகள் உலகம் ..smdsafa..

கொலுசுச் சத்தம்




அவள் பாதம் மண்ணை
முத்தமிடும் போது
கொலுசின் மணிகள் முத்தைத்
தழுவுதலின் வெளிப்பாடு !!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

இரவு




உருவமில்லா
உறக்கத்துக்கு
உயிர்
கொடுக்கும்

தாய் !!!


                                      கவிதைகள் உலகம் ..smdsafa..

முயற்சி



எட்டிப் போனாலும் தொடலாம்

பட்டுப் போனாலும் நடலாம்

தட்டிப் போனாலும் எழலாம்

முயற்சி இருந்தால் !!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

எதிர்பார்கிறேன்




எதிர்பார்ப்புகள் இல்லை என்றால் வாழ்வில் அர்த்தமே இல்லை..

எதிர்பார்கிறேன் என்றும் உன்னிடம் இந்த அழகான அன்பை மட்டும்...!


கவிதைகள் உலகம் ..smdsafa..

கண்டுபிடியுங்கள்




1.மிகவும் உடல் பலமிழந்த நேரத்தில் உங்களை தாங்கி பிடிக்கும் கைகளை கண்டுபிடியுங்கள்.

2.எல்லோரும் பார்க்க மறுக்கும் நேரத்தில் உங்களை பார்க்க விரும்பும் கண்களை கண்டுபிடியுங்கள்.

3.உங்களின் மோசமான நிலைமையிலும் உங்களை நேசிக்கும் இதயத்தை கண்டுபிடியுங்கள்.

இவைகளை நீங்கள் கண்டுபிடித்தால் நேசம் உங்களை கண்டுபிடித்திருக்கும் !


கவிதைகள் உலகம் ..smdsafa..

காவியம்



கலங்கிய
இதயத்துக்கு
கலங்கரை
விலக்கமானால் ...

இதயத்தில்
ஒரு
காவியமாய்
நீ
இருப்பாய் !!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

அவள் பாதம்



எத்தனை

விழிகளைப்

பதம்

பார்த்த

பாதம் !!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

பார்வை



புத்தகத்தை

புரட்டும் போது

படமாக உள்ள

மொட்டும் மலரும்

அவள் விழிப் பார்வையில் !!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

என் இதயத்தின் உயிரோட்டம்




என் இதயத்தில்

ஊஞ்சல் கட்டி,

நித்தமும் ஆடுபவளே...!!!

நிறுத்திவிடாதே

உன் ஆட்டத்தை....!!!

நின்று விடும்

என் உயிர் ஓட்டம்...!!!


கவிதைகள் உலகம்

           ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;