தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

காதல் உள்ளவரை உனக்காக

உனக்காகவே மண்ணில் வந்தேன்.,

உனக்காகவே கண்கள் திறந்தேன்.,

உன் சுவாசத்தில் நானே கலந்திருப்பேன்..

மலர் கொண்டுதான் உன்னை சுமப்பேன்.,

மலர் மாலையும் சுமைதான் என்பேன்.,


நீ தீண்டும் வரை சிலையாய் நான் நிற்பேன்..

உனது வேர்வையை கோர்வை செய்வேன்.,

பூக்கள் மீதிலும் தூவிச்செல்வேன்..

பனித்துளி வந்து முத்தமிட்டால்.,

போட்டியிட்டே சாகச்சொல்வேன்..

சத்தமில்லாமல் உரசிச்செல்வேன்.,

வலிகள் இல்லாமல் மடியில் சாய்வேன்..

உன் முகம் காண விழித்தும் எழுவேன்.,

ஊசி நுனியிலும் உன்முகம் காண்பேன்..

உனது பாதையில் நிழலாய் வருவேன்.,

நீ தவிக்கையில் கண்ணீர துடைப்பேன்..

என் இமைப்போல் உன்னை காண்பேன்..

காதல் உள்ளவரை காதல் கொண்டிருப்பேன்..

கவிதைகள் உலகம் ..smd safa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;