தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

மயிலிறகு


நீ உதிர்த்துப்போன ஒரு இறகு,
பத்திரமாய் என் மகளின் புத்தகத்திற்குள் !
வளர்கிறதா என்று தினமும் சோதிக்கிறாள் !
என்னிடம் என்னிடம் புருவமுயர்த்தி வினவுகிறாள்,
அப்பா !!
மயில் ஏன் குட்டி போடவில்லை? என்று,
நான் சொல்கிறேன் !
மயிலைப் பார்த்தே கேட்டுவிடலாமென்று !
உடனே எப்போது என்கிறாள் !!
சொல் மயிலே !!
எங்கு வரட்டும் பதிலுக்கு என் சின்ன மயிலுடன் ?


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;