தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

நண்பனின் பிரிவு கவிதை ரெஜின் REGIN



நண்பனின் பிரிவு !
கண்ணீரை சந்திக்கிறேன்
என் நண்பன் இல்லாதபோது
தனிமையில்தான் வாழ்கிறேன் -நீ
இல்லாத ஊரில் ...

மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள
நண்பனே நீ இல்லை அதனால்
மகிழ்ச்சியை நான் உணர்வதே இல்லை !

நீ கற்றுக்
கொடுக்கவில்லையடா
உன்னை பிரிந்து வாழ ...



என் கரங்களாக இருந்தாய் -நீ
இல்லாத பொழுதிலே என் கண்கள்
உன் பிரிவிலே கண்ணீர் சிந்துதடா !

என் கண்கள் கலங்கினால்
உன் உதிரம் கொதிக்குமடா
இன்று உன்னை பிரிந்து வாழ்கிறேன்
கண்ணீரோடு அதை துடைக்க
வருவாயா நண்பனே ...!!!

R.ரெஜின், மேக்காமண்டபம்.
எல்.எம்.எஸ்.மேல்நிலை பள்ளி.,
கடமலைக்குன்று..


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;