தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

அம்மா


அன்னையின் கண்ணீரைத்துடைக்கும் மழலை.....!
அம்மா.....!

கையில்லாத உனக்காக
கைகளோடு நான் பிறந்தேன்..!

நிலா சோறு எனக்கூட்ட
நீ ஏங்கி வருந்தாதே....!
உனக்காக சோறு ஊட்டவே - நான்
வரம் வாங்கிப் பிறந்தேனே...!



நம் ஒருவேளை சோற்றுக்காக
நீ படும்பாட்டை
நான் ஒருவாய் சோறு
உனக்கூட்டும்போது மறந்தாயே.....!

தொட்டிலிலே என்னைத் தாலாட்ட
தூக்க முடியாமல் ஏங்காதே...!
உன் மடி தவிர சிறந்த தாலாட்டு
இவ்வுலகிலே இல்லையே....!

கட்டியணைத்து என்னைக் கொஞ்ச
கண் கலங்கி நிற்காதே....!
உன் கண்ணீரைக் துடைக்க
நான் இருக்கிறேன் மறக்காதே.....!


கவிதைகள் உலகம் ..smd safa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;