தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

அவளுடன் ஒரு மழைநாளில்

உன் கைவிரல்களை விட
அந்த துப்பட்டாவை பிடித்து நடக்கவே
ஏங்குகிறேன்
தாயின் அருகாமை உன்னில்
உணர்வதால்
.....யாரேனும் காதலியோடு
மழையை ரசித்ததுண்டா
?சிறுதூரலில் சிலிர்த்து
உன் கரம் பிடித்து நடக்கையில்
சிதறுகிறதே என் மனம்
!வானம் நடத்தும்
வண்ணக்கோலங்களை
காட்டும் ஆச்சர்யங்களை
ரசித்துக் கரைகிறேன்
- நீ....மண்வாசமும் உன்வசமும்
ஒருசேர ருசித்ததால்
சுவாசிக்க மறக்கிறேன்
....யாரேனும் பார்துவிடக்கூடும் என்ற
உன் உதடுகளின் முனுமுனுப்பை
மூளைக்குச் செல்லும்முனே
முட்டுக்கட்டை போடுகிறதே
என் மனது
....உன் கைவிரலின் இளஞ்சூட்டில்
குளிர் மறக்க
-நான்,என்னை பார்வைகளால்
பதரடித்துக்கொண்டே நடக்கிறாய்
!இது என்ன புற்களில் இன்று
வெள்ளைப்பூக்கள்
மின்னுகின்றன
- ஏன் இப்படி!உன் முகத்தின் பிரதிபலிப்போ?இந்த நாள்
இந்த நொடி
இங்கேயே காலம் நிற்கட்டும்
....என்னை உன்னில் கரைத்த
மழை
என்றும்
நம்மை நம்மில் விதைக்கட்டும்
..



கவிதைகள் உலகம் smdsafa.net

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;