தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

மழலைத்தொழிலாளி



 கல்லுடைக்கிறாள் மண் சுமக்கிறாள்,
கட்டிடவேலை நீர் இறைக்கிறாள் !
கூவிவிற்கிறான் பரிமாறி நிற்கிறான்,
ஓடியாடி எடுபிடியும் ஆகிறான் !
பள்ளி செல்வதை மறந்துபோய்விட்ட,
தெளிவு வராத சிறுமியும் சிறுவனும் !
பால்குடி மறந்த சிலவருடத்தில்,
தேள்கடியாக நாட்கள் மாறினார் !
பண்டங்கள் எது தின்றாலும்,
அங்கே ஒரு மழலை பார்த்தால்,
உடனேயே அள்ளித் தந்திடும்,
தன்மைகள் வளர்த்த கரங்கள் !
தமதாக கொண்டதுதானே,
இதுவரையிலும் எங்களின் மனங்கள் !
ஆனால்,
விளையாடும் மழலைக்கூட்டம்,
வியர்வையைத்துடைக்கும் அவலம் !
வெயில் மழையுடன் போராடித்தான்,
வெரும்கால்கல் நிறைக்கும் கவளம் !
மாலை வரும் கூலிக்காக,
காலைவரும் முன்னர் எழுந்து,
கவனங்கள் தொலைக்கும் பிறவிகள் !
காலம்வரும் என்றேகூட,
காத்திருக்கத் தெரியா உறவுகள் !
வயதுக்குமீறிய சுமைகளை,
ஏற்கின்ற மெல்லிய விரல்கள் !
கண்டதும் எம்பிகுதிக்கும்,
இமைகளை உடைக்கும் திரள்கள் !
ஆகவே பொறுமைகாட்டு,
அன்பினில் வளர்ந்த மனிதா !
அழித்திட முற்படுகின்றாய்,
வளராத ரேகைகள்தம்மை !
தெரிந்தே ஏன் சிதைக்கிறாய் நீ?
நடைபயிலும் பாதைகள்தம்மை !
உற்று நோக்கிடின் எங்கெங்கினிலும்,
திரிந்தபடியே உழைக்கும் மழலைகள் !
கந்தலாடை தந்தே சிலைகளை,
சிதைப்பதென்ன உந்தன் கயமைகள் !
தவறு குற்றம் என்றே சொல்லி,
விலகி ஓடும் உங்கள் கொடுமைகள் !
பாவம் சாபம் என்பதை உணர்ந்தும்,
பாதகங்கள் செய்யும் எருமைகள் !
வளைக்காதே வானவில்களை !
உடைக்காதே குருத்தெலும்புகளை !
சிதைகாதே சின்னக் கடவுள்களை !
படைக்காதே பாவப் பூமியை !
மழலையிடம் மழலை ஆகு !
மடியினிலே விடியல் தேடு !
நிம்மதியை அவரிடம் நாடு !
அவர் வளர நீயும் ஓடு !
மழலைகள் வார்த்திடும் தன்னை !
வருங்காலம் வாழ்த்திடும் உன்னை !


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;