தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

சிட்டுக்கள்




உமது இரைச்சல்கள் இதமாய் வந்து கலந்ததுண்டு,
என் படுக்கையில் தூக்கத்தினூடே !
அந்தரத்தில் தொங்கும் தந்திக்கம்பிகளில்,
ஒய்யாரமாய் அமர்ந்திருக்குமே உமது கூட்டம் !
மொட்டைமாடிக்கு வரும்போதெல்லாம் ஓய்வின்றி,
வலமும்இடமும் பறந்து போக்குக்காட்டுவீரே கவனத்திற்கு !
எந்த இடத்தையும் பற்றியமர்ந்து குட்டி வாலாட்டும் கூட்டமே !
எங்கே போனீர் எமைக்கடந்து இங்கே இல்லாமல் !
துள்ளலாட்டம் போட்ட உமைக்கான தள்ளாட்டம் போடுது மனது !
அங்குமிங்கும் தேடுகிறேன் தொலைந்தபொருளை கண்டிடும் ஆர்வத்தில் !
காட்டவேண்டும் உமது குழுவை எமது குழந்தைக்கூட்டத்திற்கு !
காதில் விழுகிறது !!
"சிட்டுக்குருவிகள் அழிந்துவிட்டன"
எனும் செய்தி பற்றவைத்த தீயாய் !
விம்மிப் புடைக்கிறது நெஞ்சம் !
மரணம் வரலாம் பிறப்பு ஈடுசெய்யும் !
தனிமை வரலாம் இனிமை ஈடு செய்யும் !
இனம் அழியும் கொடுமை எந்த முடிவைத்தரும் ?
தடயங்களைத் தேடவேண்டுமா இனி குருவிகளுக்கு ?
அவைகளை குழந்தைகளாய்ப்பார்த்து குழந்தையாகியிருக்கிறேன் !
அச்சிறிய ஜீவன்களிடம் சிந்தை சிறைப்பட்டதும் உண்டு !
சென்றுவிட்ட உமக்காக நின்றுபெய்கிறது கண்ணீர் மழை !
என்செய்து எப்படி கொணர்வது உணர்வது உமது அருகாமையை ?
எதன் வளர்ச்சியில் துவங்கியது உமது வீழ்ச்சி ?
கண்ணெதிரே அழிந்துவிட்டவரே !
காணக் கிடைப்பீரா இனி ?
உறவைத்துண்டித்த பறவைகளே சிட்டுக்குருவிகளே !!
"உள்ளத்தில் வெறுமையாகவே உமக்கான இடம்"



கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;