நிரந்தர வீட்டை இழந்தவர்கள் நாம்...
நிரந்தர முகவரியை பிரிந்தவர்கள் நாம்...
ஓலை- குடில்களில் கூட வாழ்ந்தவர்கள் நாம்...
மர நிழல்களில் கூட உறங்கியவர்கள் நாம்...
சிறு தறப்பாளை கூட வீடாக்கியவர்கள் நாம்...
மண் குழியினில் கூட உண்டுறங்கியவர்கள் நாம்...
உறவுகளை இழந்தவர்கள் நாம்...
உணர்வுகளும் செத்தவர்களா நாம்...?
இத்தனை தூரம் வந்தவர்கள் நாம்...
அத்தனையையும் மறந்தவர்களா நாம்...?
எங்காவது ஒண்டிப்போய் கையேந்த யாசகர்களா நாம்...?
பாய் கண்ட இடத்தில் படுத்துறங்க பைத்தியங்களா நாம்?
தண்ணி கண்ட இடத்தில் விழுந்துகிடக்க எருமைகளா நாம்...?
கூடபிறந்தவன் எப்படியிருப்பினும் எப்படி நடப்பினும்
உறவென்று வரும்போது துடிக்கிறதே எம் சதை,
அடுப்படி பிரச்சினைகளை அங்காலே வைத்திடுவோம்...
நாமும் உணர்வுகள் சாகாத மனிதரென்பதை நினைத்திடுவோம்...
அதனால் அமைத்திடுவோம் தற்காலிகமாகவேனும்
ஒதுங்குவதற்கு ஓரு வீட்டினை...
நிரந்தர முகவரியை பிரிந்தவர்கள் நாம்...
ஓலை- குடில்களில் கூட வாழ்ந்தவர்கள் நாம்...
மர நிழல்களில் கூட உறங்கியவர்கள் நாம்...
சிறு தறப்பாளை கூட வீடாக்கியவர்கள் நாம்...
மண் குழியினில் கூட உண்டுறங்கியவர்கள் நாம்...
உறவுகளை இழந்தவர்கள் நாம்...
உணர்வுகளும் செத்தவர்களா நாம்...?
இத்தனை தூரம் வந்தவர்கள் நாம்...
அத்தனையையும் மறந்தவர்களா நாம்...?
எங்காவது ஒண்டிப்போய் கையேந்த யாசகர்களா நாம்...?
பாய் கண்ட இடத்தில் படுத்துறங்க பைத்தியங்களா நாம்?
தண்ணி கண்ட இடத்தில் விழுந்துகிடக்க எருமைகளா நாம்...?
கூடபிறந்தவன் எப்படியிருப்பினும் எப்படி நடப்பினும்
உறவென்று வரும்போது துடிக்கிறதே எம் சதை,
அடுப்படி பிரச்சினைகளை அங்காலே வைத்திடுவோம்...
நாமும் உணர்வுகள் சாகாத மனிதரென்பதை நினைத்திடுவோம்...
அதனால் அமைத்திடுவோம் தற்காலிகமாகவேனும்
ஒதுங்குவதற்கு ஓரு வீட்டினை...
திட்டி திட்டி தீர்த்தனர்
ஒரு பெண்ணை வேண்டாம் என்று சொன்னாய்
அவள் மனது புரியாமல் போன
கல் நெஞ்சக்காரன்
அவள் வாழ்க்கையை கெடுக்க நினைத்த பாவி
நம்பியவளை கெடுத்து மோசக்காரன்
எதைப்பற்றியும் கவலை கிடையாது எனக்கு
யார் திட்டினால் எனக்கென்ன
கோபமாய் சொல்லிவிட்டேன் அவள் எனக்கு வேண்டாம் என்று
இதனாலே திட்டி திட்டி தீர்த்தனர்
இவனுக்கெல்லாம் எங்கே காதல் வரப்போகுது
கல்யாணம் நடக்கப்போகுது
அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல்
எனது அறைக்கு சென்று விட்டேன்
இப்போது அழுகிறேன்
கதறி அழுகிறேன் சத்தம் வராமல்
நான் காதலித்தவள் என்னை காதலிக்கவில்லை
அவளை மணம் முடிக்க
ஏற்பாடு செய்தும் வேண்டாம் என்றேன்
அவளின் காதலுக்காக
அவள் காதல் வெல்ல என் காதலை புதைத்தேன்
யாருக்கு தெரியும் என் காதல்
அவளுக்கே தெரியாத புரியாத என் காதல்
இனி யாருக்கு தெரிய வேண்டும்
என் காதல் என்னோடு
எனக்குள்ளும் ஒரு காதல்
யாருக்கும் தெரியாத காதல்
அழுது புரளும் என் காதல்
அவள் நினைவிலேயே வாழும் என் காதல்
இது எனக்குள் ஒரு காதல்
இமை கொட்டாமல்,
இறுகிய கம்பிகளின் வெளிப்பக்கத்தில்,
இப்படி தினமும் மூழ்கிப்போகிறாள்...
தெருவில் குட்டியோடு கொஞ்சிடும் நாயிடம்,
தெரியவந்தது- தாய்ப்பாசம்.
மர நிழலில் த்ள்ளுவண்டியோடு,
மகனின் சட்டை பொத்தானை
மணி நேரமாய் சரிசெய்த,
அப்பாவிடம் தெரிந்தது- அக்கறை.
இப்படி எவ்வளவோ இருந்தும்,
மனமார்ந்த பாராட்டை
மின்சார வாரியம் தட்டிச்சென்றது...
இரண்டு மணி நேரம் மூச்சடிக்கி,
இயற்க்கை சினிமாத்தனத்தை
இவளுக்காக ஜன்னல் திரையில் கொடுத்ததுக்காக...
ஐந்து மணி ஆகிய ஆத்திரத்தில்,
அவசரமாய்
அம்மாவின் அதேஅழைப்புமணி
அலுவலக தொலைபேசியில் இருந்து ,
"கரண்ட் வந்ததும்,
கேபிள் போட்டு,
கார்ட்டூன் பாத்துகோ"
அன்பென்ற சொல்லுக்கு அர்த்தம் தேடுபவர்களே
அறிந்தது கொள்வீர் அன்பென்றால் அம்மா தானே..........
இரைந்து மாதங்கள் இடுப்புவலி பொறுத்து
இவ்வுலகை பரிசளித்தாள் இனியவாழ்வை எமக்களித்தாள்........
அருகிருக்கையில் அலட்சியம் அம்மா உன்சொல்களுக்கு
தொலைவில் இருக்கையில் சொல்வதற்கு
யாருமின்றி துவளுதே என்மனமதுவே..........
சோகமதில் துவண்டால் தாய்மடியே சொர்க்கம்
என்வேதனைகள் போக்க உன் ஒரு துளி புன்னகையே மருந்து ....
நான் படும் துன்பங்கள் அனைத்தும்
தாயே உன் நினைவால் தவிடு பொடியாகிவிடும்
தாவிடும் மனது அடுத்த செயலுக்கு ......
உன் மனம் நோகவிட்டபோதும்
என் மனம் நோகவிட்டதில்லையே
தாய் அன்பால் இந்த தரணியை விலைபேசிடலாம் .........
அறிந்தது கொள்வீர் அன்பென்றால் அம்மா தானே..........
இரைந்து மாதங்கள் இடுப்புவலி பொறுத்து
இவ்வுலகை பரிசளித்தாள் இனியவாழ்வை எமக்களித்தாள்........
அருகிருக்கையில் அலட்சியம் அம்மா உன்சொல்களுக்கு
தொலைவில் இருக்கையில் சொல்வதற்கு
யாருமின்றி துவளுதே என்மனமதுவே..........
சோகமதில் துவண்டால் தாய்மடியே சொர்க்கம்
என்வேதனைகள் போக்க உன் ஒரு துளி புன்னகையே மருந்து ....
நான் படும் துன்பங்கள் அனைத்தும்
தாயே உன் நினைவால் தவிடு பொடியாகிவிடும்
தாவிடும் மனது அடுத்த செயலுக்கு ......
உன் மனம் நோகவிட்டபோதும்
என் மனம் நோகவிட்டதில்லையே
தாய் அன்பால் இந்த தரணியை விலைபேசிடலாம் .........
கூடிவாழ்ந்தால் கோடி நன்மை - என்று
காட்டியதோர் நல்ல நட்பு...
நண்பனென்றால் நட்பு அல்ல - பெற்ற
தகப்பனைப்போல் தாயுள்ளம் உண்டு ..
எனக்கு வலிக்க அவனும் துடிப்பான்
என் தோல்வி கண்டு கரை ஏற்றிடுவான்,
இனிமையிலும் அருகில் இருந்திருப்பான் - என்
தனிமையினை என்றும் வென்றெடுப்பான்...
முயற்சிக்கு முதுகெலும்பாய் இருப்பான் - யாரும்
இகழ்ச்சி கொண்டால் எரிமலையாய் வெடிப்பான்
என் காதலுக்கு இவன் தூதும் செல்வான்
வேண்டாம் காதலென்று போதனையும் தருவான்..
நட்பு எனும் மந்திரம் என்றும் - அது
துடுப்பாய் வாழ்வில் வந்திடும்..
என்றும் வாழும் இனிய நட்பு -எதையும்
வென்று காட்டும் நமது நட்பு...
1. அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை.
2. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும்.
3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும்.
4. இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள்.
5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.
6. மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும்.
7. அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.
8. நம்பிக்கை செழிப்பை தராது; ஆனால் தாங்கி நிற்கும்.
9. துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.
10. நல்ல நூலைப் போன்று சிறந்த நண்பன் வேறில்லை.
2. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும்.
3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும்.
4. இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள்.
5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.
6. மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும்.
7. அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.
8. நம்பிக்கை செழிப்பை தராது; ஆனால் தாங்கி நிற்கும்.
9. துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.
10. நல்ல நூலைப் போன்று சிறந்த நண்பன் வேறில்லை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
இருளில் இருந்த என்னை ஒளி காண செய்தவள் அவள் ; என்னை முதல் முதலில் காதல் செய்த வளும் அவளே ; இன்று வரை என்மேல் அக்கறை கொண்டு நடப்பவள...
-
அம்மா .... பிறந்தவுடன் சொன்னதும்.. உயிரை வலியோடு முடிக்கும் போது சொல்வதும், அம்மா.... . 'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்ம...
-
அன்பை அறிவை அளவின்றி அளித்து அகிலம் போற்ற வாழ் ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று வாழ்நலம் வரம் பேற்று. இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி ந...
-
அவளில் சாய்வதற்காக சின்னதாய் ஒரு பொய் சொல்வேன் - "தலை வலி" உண்மையென நம்பி அவள் துடிக்கும் துடிப்பில் இருக்கும் உண்மை காதல்...