தவறுகளின் நடமாட்டம்,
தனிமைகளின் உருவேற்றம்,
தாகம் வளர்த்தவனை,
துரோகியாக்கும் உதாசீனம் !
தோற்றுப்போன நிமிஷம் தோன்றும்,
துடிக்கும் வல்லூறுகள் உனக்குள் !
ஓடிச்சென்று அமர்ந்துகொள் நண்பர் குழுவுக்குள் !
தனித்து மருதளிக்காதே அந்நேரம் !
உன் எண்ணங்கள் உருவெடுக்கக்கூடும்,
துளைக்கும் துப்பாக்கி ரவையாய் !
பின் அழிக்கக்கூடும் உன் ஆன்மாவை பழியால் !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
வெளிப்படையாய் மறுத்து வெகுளியாய் நடித்து,
நீ எனை தூரவீசிப்போனது அனைவர்க்கும் தெரியும் !
அதையே காரணமாகக்கொண்டு,
என் காதலைக்கலைத்துவிடுவேன்,
என்று நினைத்தது உன் முட்டாள்தனம் !
பழகிய எனக்கு தெரியாதா உன் புத்தியின் நர்த்தனம்?
நானும் விலகினேன் உன் விலகலின் அடிதொட்டு !
காரணம் நாம் கண்ணிமைகளுக்குள் காத்துவளர்த்த காதல் !
அதுவே கழுத்தை நெரிக்காமல் கயமை பொருத்தாமல்,
சுதந்திரமாய் பறக்கவிடச்சொன்னது உனை எனைவிட்டு !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
வறண்ட நிலத்தின் வெடிப்புகள்,
தண்ணீர்கேட்டு தவம்கிடந்தது வானம்பார்த்து !
மழை வருமோ இல்லையோ ?
மனம் அழுதது அந்த அவலநிலம் பார்த்து !
எங்கோ எனக்குள் ஒரு ஜீவன் கெஞ்சிக்கூத்தாடியது !
ஆண்டவனே இறையே பிதாவே !
வறட்சிமட்டும் வேண்டாமே நாங்கள் வாழும் உலகுக்கு !
வெந்து சிதைகிறது எமை சுமக்கும் அன்னைமடி !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அ ன்பே என்று அழைத்திடுங்கள்! ஆ சைகளை எல்லாம் பட்டியலிடுங்கள்! இ தயங்களை ஈந்திடுங்கள்! ஈ ரவிழிகளை துடைத்திடுங்கள்! உ றவுகளை நினைத்தத...
-
பூவினால் காய்கள் தோன்றும்! புலவனால் கவிதை தோன்றும்! நாவினால் சொற்கள் தோன்றும்! காதில் கூவிடும் குயில்களாய் நீங்களெல்லாம் இனிதாய் கூவுங...
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
அன்பை அறிவை அளவின்றி அளித்து அகிலம் போற்ற வாழ் ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று வாழ்நலம் வரம் பேற்று. இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி ந...
-
================================ நீ அருகில் இருந்தால் மலருவேன் இப்பொழுது பார் நீ தொலைவில் இருப்பதால் மடிகிறேன் என்னுளே.. ========...







- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA