தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கவிதைகள் உலகம் படங்கள் 2316






























கவிதைகள் உலகம் ..smdsafa..

சோக கவிதைகள் சில 17



=======================
என் கனவுகள் 

யாவும் தெருவில் 

காகித குப்பையாக ...

=======================

=======================
உன் மெல்லிசை 
குரல் என் 
குருதி நரம்பில் 
கலந்து விட்டதோ 
உன் குரல் ஒலித்து 
கொண்டு இருக்கிறது 
என்னுள் ....
=======================

=======================
மரணம் மனிதனை 
துரத்த வில்லை 
அவன் செய்த 
பாவங்களே அவனை 
துரத்துகிறது !!!
=======================

=======================
உதவிகள் இல்லையேல்


உயிர்கள் இல்லை ...
=======================



கவிதைகள் உலகம் ..smdsafa..

கவிதைத்துளிகள்



==============================

உன்னை அன்பாக 
தழுவ தான் முடியவில்லை 

ஒரு வாய்ப்பு கொடு பெண்ணே 
கவிதையால் வர்ணிக்க ....
==============================


==============================
கண்களால் வரைய 
படும் ஓவியம் கண்ணீர் ..

கண்ணீர் கொண்டு 
உருவாகும் காவியம் காதல் ..
==============================

=====================================
எங்கு போகிறாய் நண்பனே !!!
வாழ்க்கையின் வாசலை தேடியா !!
இல்லை வழுதிய வழிகளை தேடியா !!
இரண்டுமே நலம் தான் ..
நீ வழுதிய வழிகள் தான் 
உன் வாசலை திறக்கும் ..
=====================================

==========================
கண்ணாளனே 
நம் கனவுலக மழலைக்கு 
என்ன பெயர் தான் !!

கனவிலே கரையும் 
வாலிபதுக்கு 
கல்லறை தான் பெயரோ !!
==========================

================================
ரொம்ப நாள் ஆசை 
இப்படி எழுதனும்னு ....


குடி குடித்தவன் 
குடியை கெடுக்கும் ...

கூரை கூட இல்லாத 
குடியானவனுக்கு குடி எதற்கு 
அங்கே குடியானவன் காசில் 
மணி மண்டபம் மட மாளிகைகள் 
அவன் பிஞ்சு குழந்தைகளுக்கு 
கஞ்சி கூட இல்லை .......
நீ கற்றதும் கண்டதும் குடி தான் 
உன் குடியின் காரணமாக 
கெட்டது நீ மட்டும் அல்ல 
உன் தலைமுறையும் தான் 

குடிகார பயலே உனக்கு எதற்கு 
திருமணம் குழந்தை ஒரு கேடா ....
=================================

===========================
கவிதைகள் உலகம் ..smdsafa..
===========================

உன் நினைவுகள்



சூரியனாய் உன் காதல்
சுடர் வீசி மறைந்த பின்னும்
நிலவாக தொடர்வது உன் நினைவுகள் தான்
பகலில் கதிர்களாய் சூழும் உன் நினைவுகள்
நிலாவின் நேரத்தில்
கனவுகளான கணங்களால் உன் ஆக்ரமிப்புகள்
மீட்டெடுக்க முடியாத என் நிகழ்வுகள்


கவிதைகள் உலகம் ..smdsafa..

அம்மா



அள்ளிக் கொடுக்கும்
அன்னை
அன்பை வெல்ல
அகிலமதில் ஏதும் இல்லை...
அன்னையை நாளும் தொழுதிடு...
அன்பால்
அகிலமதை வென்றிடு”


கவிதைகள் உலகம் ..smdsafa..

பார்வை



புத்தகத்தை

புரட்டும் போது

படமாக உள்ள

மொட்டும் மலரும்

அவள் விழிப் பார்வையில் !!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதலுக்காக



 கட்டுண்டு கிடக்கிறேன் உன் பாதங்களில்
குனிந்து கூட பார்க்கவில்லை-நீ

சலிக்காமல் தொடர்கிறேன் உன் நிழலை
தலை கூட அசைக்கவில்லை-நீ

வரண்டுவிட்டது என் நா
இன்னமும் கூட பேசவில்லை-நீ

துவண்டுவிட்டது என் ஜீவன்
நீர்வார்க்கக்  கூட தயாராயில்லை-நீ


இருந்தால் என்ன?

நடுங்கி வீழ்ந்தாலும் நெருங்குவேன் உன்னை
மரணம் கொண்டாலும் மரித்து எழுவேன் பெண்ணே

உனக்காக!

உன் பால் கொண்ட காதலுக்காக..!


கவிதைகள் உலகம் ..smdsafa..




உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;