உன் பிறப்பால் !!
பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!!
உன் வயது தான் வளர அதனுடன் சேர்ந்து குறையதுடிக்கிறது என் வயது !!!
தாலாட்டு பாட தாய் இருந்தும் உன் செவிகள் என் குரலினை கேட்க ஏங்கினேன்!!!
நீ தூங்கும் தலையணையாய் என் மார்பு மட்டுமே இருக்க துடிக்கிறேன் !!!
நீ பிறந்த நாள் முதல் நீ என் மகள் என்று உரைக்க பொறாமையும் வளர்கிறது என்னுள்ளே
விண்மீன்கள் மின்னும் தொட்டிலில் நீ தவழ விரும்பினேன்!!!!
என் மகள் நீ என்று சொல்லாமல் உன் தந்தை நான் என்று சொல்ல கர்வம் கொள்கிறேன்
சப்தம் இன்றி மாற்றம் ஏதும் இன்றி மாறினேன் தாயாய் உன்னை பார்கையில்!!!!
அவ்வலியை போக்கி தாய் ஸ்தானம் அடைந்தேன் அப்பா என்றழைத்து என் மார்பில் நீ துங்கும் தருணம்!!!!!
இல்லை என்னும் சொல்லை நீ அறியாமல் வழிநடத்த விரும்பினேன் மகளே , உன் வாழ்கையை
ஒரு நல்ல தகப்பனாய்!!!
கவிதைகள் உலகம்..