தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

என்னுள் ஒரு தேடல்



மூங்கில் காடுகளில் அலைந்து திரிந்து ,

ஒரு மூங்கிலை தேர்வு செய்து அழகிய புல்லாங்குழலாக மாற்றி என்
மனதோடு மகிழ்ந்தேன்...

ஊத நினைத்தேன்..

மறுத்தது...

பின்பு தான் தெரிந்தது..

அது ஊமை என்று...

அது போல் தான் உன்னுடனான என் வாழ்க்கையும்...

நீ என்னுள் இணைய மாட்டாய் என்று எனக்கு தெரியும்..

இருப்பினும் என்னுள் ஒரு தேடல்...

உன்னை காண...



கவிதைகள் உலகம் ..smdsafa..

நிகழ்வுகள்



சூரியனாய் உன் காதல்
சுடர் வீசி மறைந்த பின்னும்
நிலவாக தொடர்வது உன் நினைவுகள் தான்
பகலில் கதிர்களாய் சூழும் உன் நினைவுகள்
நிலாவின் நேரத்தில்
கனவுகளான கணங்களால் உன் ஆக்ரமிப்புகள்
மீட்டெடுக்க முடியாத என் நிகழ்வுகள்


கவிதைகள் உலகம் ..smdsafa..

உயிருள்ள ஆடை



கடந்து செல்லும் கன்னியின்
மேலாடையின் சிறு பகுதி
மேலேபடும் போது அவள்
மெல்லத் தொடும் சிலிர்ப்பு
அறிந்து கொள்ளலாம் அவள்
அணியும் ஆடைக்கும் உயிருண்டு !!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதல்

காதல் ஒரு அழகிய ஓவியம் - ஆனால் 

வரைந்தவனால் அதை கடைசி வரை 

                  ரசிக்கமுடிவதில்லை..

கவிதைகள் உலகம் ..smdsafa..

பிரிவின் துளிகளோடு



அவளிடத்தில் அவன் கோப பட்டதில்லை
அவனுக்கும், எந்த சண்டையும் இல்லை..
யாருக்காகவும் அவளை அவன் விட்டு கொடுத்ததில்லை..

பின்பு ஏன் இந்த மௌனம்..
தனிமையில் இருக்கிறாள் என்று ஆறுதலாய் வந்தான்..
நெருப்பாய் கொதிக்கிறாள்..

ஏன் இந்த மாற்றம் அவளிடத்தில்..
அவளை விரும்பியதற்காக அவள் தரும் சம்மதம் இது தானோ...
அவனுக்கு இரு கண்கள் இன்றி இருந்திருப்பின் கூட இந்த கண்ணீர் வேதனை இருந்திருக்காது...

இந்த காதல் பயணம் என்றும் நிலைக்குமோ...
அதில் அவள் பால்முகம் காண கிடைக்குமோ...
தவிப்புடன்,


கவிதைகள் உலகம் ..smdsafa..

தனிமை


நீ இல்லாத ஒவ்வொரு
நொடிகளும் எனக்கு வேதனையாக
தான் இருக்கின்றது அன்பே ....
என் அருகில் நீ இல்லை
என்பதால்அல்ல
உன் அருகில் நன் இல்லை
என்பதால்...
I_Miss_Uuuuu...

கவிதைகள் உலகம் ..smdsafa..

உண்மைகள்


காதலின் சுவை
அறியாதவர்களும்,
ஒருதலையாய்க்
காதலித்துத் தோற்றவர்களும்
காதலை மதிப்பதில்லை!


கவிதைகள் உலகம்..

பிடிக்காத கணவனுடன்


ஆற்று நீரைச் சொட்டியவாறே சென்றது
லாரியில் இருந்த ஈர மணல்,
பிறந்த வீட்டிலிருந்து, பிடிக்காத கணவனுடன்
அழுதுகொண்டே செல்லும் பெண்ணைப் போல...!!


கவிதைகள் உலகம்..

பெண்கள்


* 5 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது தாய்

* 15 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது சகோதரி

* 30 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது தோழி

* 3 மணி நேரத்திற்கு மேலாகியும் சமாதானபடுத்த முடிய வில்லையெனில், அது காதலி

* உனக்கு சமாதானம் செய்யும் சந்தர்ப்பம் கூட கிடைக்க வில்லையெனில் அது மனைவி


கவிதைகள் உலகம்..

கணவன் - மனைவி யார் அதிகம் மகிழ்ச்சியா இருக்றது??

மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!


கணவன்: என்ன?

மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???

கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!

மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….

கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன

என் மகளுக்கு ஒரு கவிதை!!


அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன்
உன் பிறப்பால் !!
பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!!

உன் வயது தான் வளர அதனுடன் சேர்ந்து குறையதுடிக்கிறது என் வயது !!!

தாலாட்டு பாட தாய் இருந்தும் உன் செவிகள் என் குரலினை கேட்க ஏங்கினேன்!!!

நீ தூங்கும் தலையணையாய் என் மார்பு மட்டுமே இருக்க துடிக்கிறேன் !!!

நீ பிறந்த நாள் முதல் நீ என் மகள் என்று உரைக்க பொறாமையும் வளர்கிறது என்னுள்ளே

விண்மீன்கள் மின்னும் தொட்டிலில் நீ தவழ விரும்பினேன்!!!!

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?


1.தரைக் கூட்ட இருக்கும்
பாவாடையை தூக்கி பிடித்த படி பாத
கொலுசில் ஜதி பாடி நடந்து வரும்
போது.
2.பேருந்தில்
தெரிந்தே இடிப்பவனுக்கு யாருக்குமே தெரியாமல்
தண்டனை தரும் போது.
3.நான் இப்படியெல்லாம் வளர்ந்தேன்
என்று பெருமை பேசாமல்
உன்னை அழகாய் வளர்த்திருக்கிறார்கள்
என்று அனைவரையும் சொல்ல வைக்கும்
போது.

ஒரு சின்ன உண்மை..

நமக்கு பிடிச்சவங்க மேல ரொம்ப கோவம்
இருந்தாலும் அவங்க கிட்ட பேசாம
நம்மளால இருக்க முடியாது...

அதே நேரம் பேசவும் மனசு வராது
mobile display ல அவங்க name தான் இருக்கும்
call பண்ணலாமா வேண்டாமான்னு 1000
முறை யோசிப்போம் . . .

ஏன் sometimes call பண்ணிட்டு ring
போறதுக்கு முன்னாடி cut
பண்ணிடுவோம்
அந்த time அவங்க நமக்கு call
பண்ணினா செம்ம happy ah feel
பண்ணுவோம்....

but பேசும்
போது என்னவோ கோவமா இருக்குற
மாறி தான் பேசுவோம்
but actual fact என்னன்னா அவங்க call
பண்ணதுமே நம்ம கோவம் போய்டும. ♡♥

கவிதைகள் உலகம் ..smdsafa..

புரியாத நட்பு

கவிதைகள் உலகம் ..smdsafa..

நேசித்தலின் வலி

கவிதைகள் உலகம் ..smdsafa..

நேசிப்பின் வித்தியாசம்


இவ் உலகில் யாரையும்
எல்லை மீறி நேசித்து விடாதே....
நீ எதிர் பார்த்த
அன்பு உனக்கு கிடைக்காவிட்டால்
அது போல் ஒரு துன்பத்தை நீ
சந்தித்திருக்க மாட்டாய்...
நேசித்தால் மட்டும் போதும்
வேறு எதையும் எதிர்
பார்த்து விடாதே,
மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே....!

கவிதைகள் உலகம் ..smdsafa..

கண்ணீரின் வலி



ஒருவரை இழக்கும் போது
வரும் கண்ணீரை விட

அவர்களை இழக்க கூடாது...
என்று நினைக்கும் போது
வரும் கண்ணீருக்கு தான்
வலி அதிகம்..


கவிதைகள் உலகம் ..smdsafa..

யார் சொன்னது .?



என் கறுப்பு வெள்ளை 
கண்களிடம்
யார் சொன்னது ....?
உன்னைப் பார்த்தவுடன் 
வண்ணமயமாய்
விழித்திரையில் பதிவுசெய்ய
வேண்டுமென்று..

இயல்பாய் துடிக்கும் என் இதயத்திடம்
யார் சொன்னது?
உன்னைப் பார்த்தவுடன்
வேகமாக துடிக்க 
வேண்டுமென்று...

இனிதாய் பேசும் 
என் நாக்கிடம்
யார் சொன்னது ....?
உன் பேரை 
உச்சரிக்கும்போது
இசையோடு உச்சரிக்க 
வேண்டுமென்று ....

நீ நீயாக இருக்க
மாற்றம் மட்டும் என்னிலா !!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதல்

உருவத்தால் வருவது காதல் அல்ல
உள்ளத்தின் உணர்வுகளால்
உருவாவதே காதல்!

இதயத்தை திருடுவது காதல் அல்ல
இதயத்தால் இணைவதே காதல்!

இன்பத்தை பகிர்வது காதல் அல்ல
துன்பத்திலும் தொடர்வது தான் காதல்.!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;