தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

அவள் என்னை பார்க்க தவறிய நாட்களில்



கசக்கி எறியும் காகிதமும்
கிறுக்கி தள்ளும் கடிதங்களும்
சில நேரம் தலையணையையும்
நனைத்துச் செல்லும்...,
அவள் என்னை
பார்க்க தவறிய நாட்களில்!


கவிதைகள் உலகம் ..smdsafa..

அடிமாடு



வரிசைகட்டி வாகனத்தில் நோஞ்சான் மாடுகள்,
சாலையோர ஜீவராசிகளை ரசித்தபடியோ வெறுத்தபடியோ !
தாம் வாழத்தகுதியற்றவர் என மனிதன் நிர்ணயித்துவிட்டான் !
எனும் பயங்கரத்தை அறியா பயணத்தை மேற்கொள்பவர்களாய் !
எங்காவது இறக்கி அங்கேயே முடிக்கப்படுவோம் என்பதறியாமல் !
கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்ற கொடூர எண்ணகர்கள் நமக்குள் !
நீ உதவாதுபோனால் உன்னையே வெட்டித்தின்ன சம்மதிக்குமா மதி ?
ஆறறிவு படைத்தது உழைத்துப்போட்ட ஐந்தறிவை அடித்துப்புசிக்கவா ?
மனிதா ! மனிதனா நீ ?
நாடுகேட்காதுபோனாலும் நாளை ஒரு மாடு கேட்கும் !
உயிர் வதைக்கும் உனை முட்டித்தூக்கும் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் நினைவில் தூங்குது



உன் நினைவில்
தூங்குது என் நெஞ்சம் --
சுமையாக இருந்தும்
வலுவிழக்க வில்லை
என் இதயம் ---
உணர்வுகள் தட்டி
எழுப்புகிறது பசியை
புசிக்கிறேன் --
நம் நினைவுகளை


கவிதைகள் உலகம் ..smdsafa..

என் தனிமை



என் தனிமை
உன்னை நினைத்து
புலம்புகிறது
நீ தொலைவில்
இருப்பதால் ..
நித்திரையை தான்
விரும்புகிறது தனிமை
கனவு வரும் என்பதால்


கவிதைகள் உலகம் ..smdsafa..

அவளின் நினைவுகளில்



அவள் காதல் இன்று
என் கண்ணீராகவும்,
என் காதல் இன்று
அவள் நாட்குறிப்பின்
மிச்சமாகவும் தொடர்கிறேன்
அவளின் நினைவுகளில்
என் காதலை!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;